கற்றது தமிழ்

இன்று

இடம் : நியூட்டன் நியு ஜெர்சியில் ஒரு இல்லத்தில்
வருடம் : 2007


பிரபாக்கர்க்கு பசித்தது. காரில் வரும் வழியில்தான் ஒரு ஸ்டார்பக்ஸ் காபி குடித்தார். ஆனாலும் அரை மணி நேரத்தில் வயிற்றில் யாரோ தாண்டவம் ஆடுவது போல் இருந்தது. பிரிட்ஜை திறந்து பார்த்தார். அதே வீனா போன கோக், பெப்சி பாட்டில்கள். ப்ரீசரில் பீட்சா இருந்தது. இப்பொழுது பார்த்து ஏதாவது காரமாக சாப்பிட வேணும் போல இருந்தது. ம்ம்ம்ம்... எப்படி தான் இந்த கன்றாவியை எல்லாம் இந்த அமெரிக்கர்கள் ஒவ்வொரு நாளும் சாப்பிடுகிறார்களோ?

அவர் மனைவி ஆனந்தி டெக்சாஸில் இருக்கும் அவள் தம்பிக்கு உடம்பு சுகமில்லை என்று இரண்டு நாட்களுக்கு முன் சென்றாள். இன்னும் இரண்டு நாட்கள் இருந்து நிலவரம் பார்த்து விட்டு வருவதாக சொன்னாள். இந்த நேரம் பார்த்து இவர்களின் ஒரே செல்ல மகள் லலிதா தனது 9 மாத குழந்தை ரவியுடன் வீட்டுக்கு வந்திருந்தாள். லலிதா டிவியில் Every body Loves Raymond பார்த்து கெக்கே பெக்கே என்று சிரித்து கொண்டிருந்தாள். விளம்பர இடைவேளையில் சேனல் மாற்றும் பொழுது சன் டிவி ஒரு நொடி தோன்றி மறைந்தது.


அன்று

இடம் : கோவில்பட்டி அரசினர் மேல் நிலைப்பள்ளி
வருடம் : 1972

பிரபாகர்க்கு தூக்கம் கண்ணை சொக்கியது. மதியம் அம்மா கொடுத்து விட்ட வத்த குழம்பும் பீன்ஸ் கறியும் ஒரு வெட்டு வெட்டி விட்டு உட்கார்ந்தால் அப்படி தான் இருக்கும். அம்மாவை சின்ன பாக்ஸ் வாங்க சொல்ல வேண்டும். அவன் அருகில் அமர்ந்திருக்கும் வேலு தூங்கியே விட்டான். இது அறிவியலா இல்லை அறுவை இயலா என்று சத்தம் போட்டு வாத்தியிடம் கேட்க வேண்டும் போல இருந்தது. ஏதோ ஒரு பூச்சியின் படத்தை வரைந்து அதைப்பற்றி சிலாகித்து கொண்டு இருந்தார்.

மணி அடித்த உடன் வகுப்பறையில் ஒரு சலசலப்பு உண்டானது. "சரி தான். நாம மட்டும் இல்லை, எல்லாருமே மணி அடிக்க தான் காத்துகிட்டு இருந்தாங்க போல" என்று பிரபாகர் நினைத்து கொண்டான். அடுத்தது வகுப்பறைக்குள் நுழைந்தார் தமிழ் வாத்தியார் காளிதாசன்.



இன்று

"லல்லி கன்னா...அந்த சன் டிவி கொஞ்சம் வெய்யேன்"
"How can you see all this mega serial shit dad? Dont you think it is boring"
லல்லி பிறந்தது வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவில் தான். அவளுக்கு தமிழ் பேசினால் புரியும். ஆனால் பேச மாட்டாள். பேசினால் ஏதோ மியூசிக் சேனல் வீஜே போல தமிழ் மேல் ரோட் ரோலேர் ஏற்றி விட்டது போல பேசுவாள். சின்ன வயதில் எப்பொழுதோ அவளை இந்தியாவுக்கு அழைத்து சென்ற பொழுது அவளுக்கு உடம்பு முடியாமல் போய் விட்டது.

"Too many mosquitos daddy."
"So nasty these roads are."
"Why are all vehicles so crowded"
என்று கேள்வி கணைகளால் பிரபாகரையும் ஆனந்தியையும் ஒரு வழி செய்து விட்டாள். அதன் பிறகு இந்தியா என்றாலே அவளுக்கு பயம். வளர்ந்த பிறகு அவளை கட்டாயபடுத்தவும் முடியவில்லை. அமெரிக்காவில் இருக்கும் தூரத்து உறவினர் வீட்டில் விட்டு விட்டு இவர்கள் மட்டும் இந்தியா சென்று வந்தார்கள். அவளுக்கு எக்ஸாம் இருப்பதாக இந்திய உறவினர்களுக்கு பொய் சொன்னார்கள். அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்த ராஜாவுக்கு அவளை மணம் முடித்தார்கள். அவனும் இவளை போல அதே ABCD என்பதால் இரண்டு பேரும் ஆங்கிலத்திலேயே பேசி குடும்பம் நடத்தினார்கள்.


அன்று

அதே தமிழ் வாதியார்களுக்கு உரிய கதர் வேஷ்டி, ஜிப்பா மற்றும் நெற்றியில் பட்டை சகிதம் வந்தார் தமிழ் ஆசிரியார் காளிதாசன். இவர் வகுப்பு என்றால் மாணவர்களுக்கு கொள்ளை பிரியம். மாணவர்களை நண்பர்கள் போல நடத்துவார். முக்கியமாக கேள்வி கேட்டு தொந்தரவு செய்ய மாட்டார். பாடத்தை புரியும்படி எளிதான உதாரணங்களோட சொல்லி தருவதில் கெட்டிக்காரர்.

"யாமறிந்த மொழிகளில் தமிழ் போல் இனிமையான மொழி வேறேதும் இல்லை. இதை யாரு சொன்னா?"
"நீங்க தான் சார்" தூகத்திலிருந்து மீண்டு வந்த வேலு நக்கல் பேசினான்.
வகுப்பில் எல்லோருடன் சேர்ந்து காளிதாசனும் சிரித்தார்.
"இதை சொன்னது மகா கவி பாரதி. இரண்டாயிரம் வருஷமா ஒரு பாஷை மக்களால பேச படுதுன்னா அப்போ அந்த பாஷைல ஏதோ ஒரு சக்தி இருக்கணும். இல்லன்னா இத்தனை வருஷங்கள் தாண்டி நீங்களும் நானும் அதை பேசிகிட்டு இருக்க மாட்டோம்."
"ஆனா சார். இப்போ இங்கிலீஷ் படிக்க சொல்லி தான் என் அப்பா அம்மா என்னை வற்புறுத்தறாங்க. வேலைக்கு போற இடத்துல எல்லர்க்கிட்டையும் சகஜமா இங்கிலீஷ்ல தானே பேசி ஆகணும்?"
"ஆங்கிலம் படிங்க, வேண்டாம்னு சொல்லல. ஆனா தாய் மொழிய மறந்துடாதீங்க. சங்க கால இலக்கியம் படிங்க. பொன்னியின் செல்வன், திருக்குறள் மாதிரி தமிழ கொண்டாடற படைப்புக்கள படிங்க. நீங்க பேசிக்கிட்டு இருக்கிறது எவ்வளவு இனிமையான மொழினு அப்போ தான் உங்களுக்கு புரியும்."
"அதெல்லாம் சரி சார். ஆனா தமிழ் படிச்சா எவன் சார் வேலை தரான்? வெளில போய் தமிழ்ல பேசினாலே கவுரவ குறைச்சலா நினைக்கிற மாதிரி ஆக்கிடானுங்களே. வெறும் கெட்ட வார்த்தைகள் மட்டும் தான் தாய் மொழில பேசற மாதிரி ஆயடுச்சு சார்."
இதை சொன்ன உடனே காளிதாசன் முகம் வாடி விட்டது. "தமிழ் இனி மெல்ல சாகும்ங்கறது சரியா போச்சு". அவர் கண்கள் சற்று கலங்கினதை பார்த்து பிரபாகர்க்கும் வருத்தமாக இருந்தது.


இன்று

"Dont you miss mummy during dinner?" கேட்டாள் லலிதா.
தமிழில் அழகாக அம்மான்னு ஒரு வார்த்தை இருக்கும்போது தாயை ஏதோ எகிப்திய சவத்தின் பேரில கூப்பிடுவதை கேட்டு கஷ்டமாக இருந்தது. தன் மகளுக்கு தமிழ் பேச வரவில்லை என்பதை நினைத்து பிரபாகர்க்கு வருத்தம் ஏற்படாத நாளே இல்லை. எந்த தமிழ் தொலைக்காட்சி பார்த்தாலும் அதில் ஆங்கிலமே சரளமாக பேசுகிறார்கள். தமிழ் வழி கல்வி படிப்பவர்களுக்கு மாநில முதலிடம் அந்தஸ்து கொடுத்தாலும் எல்லோரும் ஹிந்தியும் பிரெஞ்சும் தான் படிக்கிறார்கள். தமிழை திணிப்பதை விட அதன் மேல் காதல் கொள்ள செய்ய யாரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிய வில்லை.

மேடையில் தமிழுக்காக உயிரை விட தயாராக இருப்பதாக முழக்கமிடும் முக்கால்வாசி அரசியல்வாதிகளின் பிள்ளைகள் Montford-ல் படிக்கிறார்கள். இந்தியாவில் எதாவது ஒரு அரசியல்வாதியின் பிள்ளையாவது அரசினர் பள்ளியில் படிக்கின்றனரா? எல்லாம் இளிச்சவாய் தமிழனிடம் வெறும் மேடை பேச்சில் கைத்தட்டல் வாங்கவும் வோட்டு வாங்கவும் தான். காளிதாசன் சார் சொன்னது போல "தமிழ் இனி மெல்ல சாகுமோ"????

அப்பொழுது தான் லலிதாவின் 9 மாத குழந்தை "ம்மா..ம்மா" என்று அறைக்கூவல் விட்டது. லல்லிக்கு ஒரே சந்தோஷம். பிரபாகர்க்கும் சந்தோஷமாக இருந்தது. பேச முடிகிற வரைக்கும் அதை மம்மி சொல்ல சொல்லி பழக்காமல் இருந்தால்... தமிழ் கொஞ்ச நாள் கழித்தே சாகும்.

பி.கு. : இந்த கதைய நான் எழுதலை (இது கதைய படிக்கும் போதே உங்களுக்கு தெரியும்னெல்லாம் சொல்லப்புடாது). இந்த கதைய எழுதினவரும் ப்ளாக்கர் தான். முடிஞ்சா அவரு யாருன்னு நீங்க கெஸ் பண்ணுங்க. பாக்கலாம் எத்தனை பேரு சரியா கண்டுபிடிக்கறீங்கன்னு ;))

அவள் டைரியிலிருந்து சில குறிப்புகள்..

மார்ச் 12, 2006.

இன்று வழக்கம் போல் நூலகத்திலிருந்து கொண்டு வந்திருந்த நாவலை படித்துக்கொண்டிருந்தேன். எப்பொழுதும் கண்கள் புத்தகத்தில் இருப்பதை படிக்கையில் மனதில் அந்த காட்சியும் அந்த வசனங்கள் பேசப்படுவது போலவும் ஒரு மாயை உருவாகும். இன்றும் அப்படி வசனங்கள் மனதில் ஓடுகையில் தான் அதிர்ச்சியுடன் உணர்ந்தேன். வசனங்களில் கதாநாயகனின் பெயர் வருமிடங்களில் எல்லாம் என் மனம் என்னையும் அறியாமல் அவன் பெயரை உச்சரித்துக்கொண்டிருப்பதை. ஏன் அவன் பெயர்? என்று எனக்குள் எழும் கேள்விக்கு, சமீப காலமாய் அவனுடன் அதிகம் பேசுவதால் அவன் நினைப்பாக இருந்திருக்கலாம்.. வேறேதும் காரணங்கள் இல்லை என்று எனக்கு நானே சமாதானம் கூறிக்கொள்கிறேன்.


ஜூன் 25, 2006.

சில நாட்களாய் அவன் எனக்குள் ஏற்படுத்தி இருக்கும் மாற்றங்களை அவனிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில் இருந்தேன். இன்று அதற்கெல்லாம் அவசியமே இல்லை என்பது போல் அவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை அறிமுகப்படுத்தினான். முதலில் ஏதோ விளையாட்டாய் ஏமாற்றுகிறான் என்று நினைத்து அவனிடம் மேலும் விவரங்கள் கேட்க கேட்கதான் உண்மை உரைத்தது. அவன் விளையாடவில்லை என்று. அவனிடம் வாழ்த்தை மட்டும் சொல்லிவிட்டு தனிமையை நாடினேன். நீண்ட நாட்களுக்கு பின் இன்று கண்ணீர் வற்றும் வரை அழுது தீர்த்தேன்.


ஆகஸ்ட் 20, 2006.

இன்று அதிகாலை அவனுக்கு திருமணம். அவனை மணமேடையில் இன்னொரு பெண்ணுடன் பார்க்கும் சக்தி எனக்கில்லை. நண்பர்களிடம் அலுவலகத்தில் அவசர வேலை என்று பொய் உரைத்துவிட்டு நேராக கோவிலுக்கு சென்றுவிட்டேன். என் மனமும் உடலும் சோர்ந்து போகும் வரை கோவில் நடையை சுற்றினேன். ஆனாலும் இழக்க கூடாத ஏதோ ஒன்றை இழந்துவிட்ட உணர்விலிருந்து என்னால் விடுபட முடியவில்லை. இனி வாழ்வை எதிர்கொள்ளும் சக்தியை மட்டும் எனக்களி ஆண்டவா என்று மட்டும் வேண்டிவிட்டு வந்தேன்.


அக்டோபர் 3, 2006.

இன்று அலுவலகத்தில் வேலை சற்று அதிகம். அசதியாக இருக்கவே அப்பாவை வந்து அழைத்து போக சொல்லியிருந்தேன். காரில் செல்கையில் அதில் ஒலித்த மெல்லிய கீதமும் அசதியும் கண்ணை சொக்கும் வேளையில்.. என் அருகில் அவன் அமர்ந்திருப்பது போலவும் இதமாய் என் தலையை வருடுவது போலவும் தத்ரூபமாய் என் உள்ளுணர்வு உணர, திடுக்கிட்டு விழித்து பார்த்தேன். என்னருகில் இருந்த இருக்கை காலியாகத்தான் இருந்தது. ஆனாலும் எப்படி? வெறும் பிரம்மையா? ஆனால் என் தலையை கோதிய அவன் ஸ்பரிசம் நிஜம் போலவே இருந்ததே?

- தொடரும்.

பி.கு. : எல்லாரும் தொடர் கதை எழுதறாங்களே நாமளும் எழுதினா என்னன்னு முயற்சி பண்ணினது தான். மத்தபடி இது என் டைரி குறிப்புகளும் கிடையாது. எனக்கு டைரி எழுதும் பழக்கமும் கிடையாது ;-))

December 2nd

டிசம்பர் 2

வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.. ஏன் என்று கேட்டால் அன்று தான் காயத்ரியை சந்தித்த நாள்.

முதல்ல பார்க்கும் போது ரொம்ப அமைதியான பொண்ணா தெரிஞ்சுது.
இப்பவும் அப்படித் தான். பார்க்கும் போது அமைதியாதான் தெரிவா...
ஆனா பேசினதுக்கப்புறம் தெரிஞ்சுது... அவ பேசிக்கிட்டே தான் இருப்பான்னு...

Blog மக்களே நீங்களும் இப்ப அதையே உணர்ந்து இருப்பீங்கன்னு நினைக்கறேன்...

என்னடா இவன் தமிழை கொலை பண்றானேனு நினைக்க வேணாம்..
நான் டைப் பண்ற PC-ல ஏதோ கோளாறு...

மீண்டும் சந்திப்போம்...

நவராத்திரி ஸ்பெஷல்...

ஹல்லோ மக்கள்ஸ்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க.. பல பேர் அவங்க வீட்ல கொலு கொண்டாடிருப்பீங்க.. அம்பி மாதிரி சில பேர் கொலு வீட்டுக்கெல்லாம் போய் சுண்டல் கலெக்ஷன்ல சுறுசுறுப்பா இறங்கி இருப்பீங்க.. இன்னும் சில பேர் ரெண்டுத்துக்கும் வழி இல்லாம அக்கடான்னு ஒக்காந்து இப்படி மொக்கை போஸ்ட்டா படிச்சிட்டிருப்பீங்க.. நானும் உங்கள மாதிரி தாங்க அக்கடான்னு ப்ளாக் உலகமே கதின்னு கிடந்துட்டிருந்த சமயத்துல நம்ம குரு கூப்டு எங்க வீட்ல கொலு வெச்சிருக்கோம்.. ப்ளாக் உலகத்தின் மொத்த ரெப்ரெசண்டேடிவ்வா நீ வந்து சுண்டல வாங்கிட்டு போனு பாசமா கூப்பிட.. எங்க நாம மறுத்துட்டா அவங்க மனசு கஷ்டப்பட்டுமோன்னு நானும் வரென்னு சொல்லிட்டேன்.

இந்த வாரம் புல்லா ஈவினிங் நமக்கு சுண்டல் கலெக்ஷன் இருக்கும்னு தெரிஞ்சு தானோ என்னமோ என் டேமேஜர் இந்த வாரம் முழுக்க மார்னிங் ஷிப்ட போட்டுட்டாரு.. சரி எத்தனை பேர் கூப்டாலும் நம்ம குருவுக்கு பர்ஸ்ட் ப்ரிபெரென்ஸ்னு சொல்லி திங்கட்கிழமையே அவங்க வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டேன் (கூப்டது மொத்தமே 2 பேர் தாங்கறது அவங்களுக்கென்ன தெரியவா போகுது?). அவங்க கிட்ட எத்தனை மணிக்குங்க சுண்டல் ரெடி பண்ணுவீங்கன்னு கேட்டா 5 மணிக்குனு சொன்னாங்க. சரி, அப்போ ஒரு 3.30க்கு ஆபீஸ்ல இருந்து கிளம்பினா போதும்னு நினைச்சு எப்பவும் போல ஆபீஸ்ல கதை அடிக்க ஒக்காந்தாச்சு. நமக்கு தான் கதை அடிக்க ஒக்காந்தா டைம் போறதே தெரியாதே. லைட்டா கொஞ்சம் பசி வயித்துல எட்டி பாக்க சரி கிளம்பணுமே மணி என்ன ஆச்சுன்னு பாக்கலாம்னு பாத்தா அப்பவே 4 :((.

ஆஹா.. விடு ஜூட்னு கிளம்பி ஆட்டோ புடிச்சு செண்ட்ரல் போய் அங்க இருந்து ட்ரெயின் புடிச்சு அவங்க ஊர்ல போய் இறங்கினா சொன்ன மாதிரியே நம்மள பிக்-அப் பண்ணிட்டு போக குரு ஸ்டேஷன்ல வெய்டிங்.. ஆஹான்னு அவங்கள பாராட்டினா அடுத்த செகண்டு ஆப்பு வெய்க்கறாங்க.. என்ன பிக்-அப் பண்ணிட்டு போக அவங்க கொண்டு வந்தது அவங்களோட அப்பாவி ஸ்கூட்டிய.. எனக்கே அந்த வண்டிய பாக்க பாவமா தான் இருந்துது. ஏன் குருவே இந்த வண்டிக்கு இப்படி ஒரு சோதனை? அது பாவம் எம்புட்டு வெயிட்டதான் தாங்கும்னு கேட்டா அதை தான் உன்ன வெச்சு டெஸ்ட் பண்ண போறேங்கறாங்க :(( அட கொடுமையே.. நம்ம புண்ணியத்துல இன்னிக்கு இந்த வண்டிக்கு கபால மோட்சம் தான்னு நினைச்சிக்கிட்டே ஏறினேன்.. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது. வண்டி நம்ம கைப்புள்ளயோட பரம்பரை போல.. எவ்வளவு வெயிட் ஏத்தினாலும் தாங்குது.

இப்படி ஒரு உசுரை வதைச்சு அவங்க வீட்டுக்கு போய் சேந்தா, குரு ஒரே உபசரிப்பு மழைல நனைச்சிட்டாங்க.. பிஸ்கேட்ஸ் என்ன, ஸ்வீட்ஸ் என்ன, மிக்ஸ்சர் என்ன, சுண்டல் என்ன, காபி என்ன.. எதை சொல்றது எதை விடறது? இதுல அந்த ஸ்வீட்ட பத்தி நான் கண்டிப்பா சொல்லியே ஆகணும்.. அது அவங்க வீட்ல ஸ்பெஷலா செஞ்சதாம்.. அதை கையால புடவே முடியல.. குருவ பாத்து என்ன பழி வாங்கும் படலமெல்லாம் இல்லியேன்னு கேட்டா.. அது கைல ஒடைக்க முடியாது ஆனா வாயில போட்டா ஈஸியா கடிக்கலாம்னு உசுப்பேத்தி விட.. நாமலும் அவனவன் முழு கரும்பையே பல்லால கடிச்சு ஒடைக்கறானுங்க.. நாம இதை கூட ஒடைக்கலன்னா எப்படின்னு என்ன நானே சமாதானப்படுத்திக்கிட்டு அதை கடிச்சேன்.. என் பல்லு இன்னும் முழுசா பத்ரமா தான் இருக்குனு நான் சொன்னா நீங்க நம்பணும்.

சைட் கேப்ல நம்ம சூடான் புலி வேற சுண்டல் பார்சல் கேட்டாரே.. அவருக்கு எத்தனை கிலோ வேணும்னு கேட்கலாம்னு அவருக்கு போன் பண்ணா ஒரு பொம்பளை ஏதோ புரியாத மொழில ஒரு 3 நிமிஷம் திட்டிட்டு.. கடைசில இங்கிலிபீஷல புலி அவுட் ஆப் ரீச்னு சொல்லுது.. ஆஹா.. புலிக்கு சுண்டல் சாப்பிடற குடுப்பினை இல்ல போலன்னு அவர வெறுப்பேத்தி ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பிட்டு.. நான் வாங்க வேண்டிய பார்சல், கிப்டு (@புலி, எனக்கு பிள்ளையார் பொம்மை இல்ல.. ராதா கிருஷ்ணர் பொம்மை தான் :P) எல்லாம் கரெக்டா கலெக்ட பண்ணிட்டு 7 மணிக்கு அங்க இருந்து கிளாம்பி அவங்க ஊர் ஸ்டேஷன் வந்தா புலி அப்போ கால் பண்ணுது. லேட் கால் வேஸ்ட் கால்னு அவர கொஞ்ச நேரம் ஓட்டிட்டு, பஸ்ஸு, ஆட்டோ, ட்ரெயினுன்னு இருக்கற எல்லா போக்குவரத்து வசதியும் உபயோகப்படுத்தி வீட்டுக்கு வர 9 மணி ஆயிடுச்சு. அப்புறம் என்ன கட்டுன கட்டுக்கு சூப்பரா ஒரு தூக்கம் போட போயாச்சு.. என்ன, தூங்கின தூக்கத்துல இன்னிக்கு மார்னிங் ஷிப்டுங்கறத மறந்து போய் 5.30 மணிக்கு போகவேண்டிய ஆபீஸுக்கு 7.00 மணிக்கு தான் போனேன் :((

ஆரம்பிச்சிட்டோமில்ல...





Time is too slow for those who wait,

Too swift for those who fear,

Too long for those who grieve,

Too short for those who rejoice,

but for those who love,

Time is eternity.


P.S. : Eppavum pola fwd mail-la vandhadhu dhaan ;))

முகமூடி

முகமறியா நபர்களிடம்
பேசத் துவங்கிய போது
சோகங்களை மறக்க
மறைக்க
அணிந்து கொண்ட முகமூடி.

அன்று,
எதிர்பார்ப்புகளையும்
ஏமாற்றங்களையும்
மறைக்க உதவியது
மகிழ்ச்சியாய் இருந்தது

இன்று,
உண்மை முகத்தை
காட்ட இயலாமல்
தவிக்கையில்
நெருஞ்சியாய் உறுத்துகிறது!

எப்படி பெண்ணே??



என் முகத்தைப் பார்த்தே
என் உணர்வுகளை
புரிந்து கொள்கையில்
என் தாயானாய்

நான் தவறு
செய்யும் போது
உரிமையுடன் கண்டிக்கையில்
என் தந்தையானாய்

நான் குழம்பும் பொழுது
என்னை வழி நடத்துவதில்
என் ஆசானானாய்

அவ்வப்போது என்னுடன்
சிறு சிறு
சண்டைகள் போடும் போது
என் சகோதரியானாய்

நான் ஆதரவு தேடும் போது
தோள் கொடுத்து
உதவுகையில்
என் தோழியானாய்

எப்படி பெண்ணே
உன்னுள் மட்டும்
இத்தனை பரிமாணங்கள்
படைத்தான் ஆண்டவன்??

பி.கு. : இது ஒரு மீள்பதிவு.

ஓர் அறிமுகம்..

வணக்கம் மக்களே.. எல்லாரும் எப்படி இருக்கீங்க? வீக் எண்ட் எல்லாம் நல்லா கொண்டாடினீங்களா? சரி சரி.. ரொம்ப ப்ளேட் போடாம நேரா மேட்டருக்கு வர்றேன்.. இனி என் ப்ளாக்ல நான் மட்டும் இல்ல. என் நண்பன் கௌதம் (எ) சந்தோஷ் (அவனுக்கு சூர்யான்னா ரொம்ப க்ரேஸ்.. அதனால சூர்யாவோட கேரக்டர் நேமையே அவன் ப்ளாக்கர் ஐடியா யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டான்..) நான் ப்ளாக் ஆரம்பிச்சதுல இருந்தே அவன் கிட்ட உங்க எல்லார் பத்தியும் சொல்லுவேன்.. அதனால உங்கள்ள பல பேர அவனுக்கு முன்னாடியே தெரியும். அதே மாதிரி ப்ளாக் மக்கள் சில பேர் கிட்டயும் அவனை பத்தி சொல்லியிருக்கேன்.. ஆக இவன முழுக்க முழுக்க நியூ எண்ட்ரீனெல்லாம் சொல்ல முடியாது.

சரி.. இவனப்பத்தி தெரியாதவங்களுக்கு ஒரு குட்டி இண்ட்ரோ.. இவன் எனக்கு அறிமுகமானது என் முதல் கம்பெனில தான். எல்லாரும் ஒன்னா ட்ரெய்னீஸா சேந்தோம்.. எங்க எக்ஸ்ப்ரீயின்ஸ் = எங்க ப்ரெண்ட்ஷிபின் வயசு . எங்க பேட்ச்ல சேட்டைக்கு பேர் போனவன்னா இவன சொல்லலாம்.. என்ன கலாய்க்கறேன் பேர்வழின்னு ஆரம்பிச்சுட்டு என்கிட்ட அதிகமா அடி வாங்கின ஒரே புத்திசாலியும் இவன் தான். இங்கயும் அந்த தப்ப பண்ணி என்கிட்ட ஒதை வாங்க மாட்டான்னு நம்பறேன் ;))

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் இன்று முதல் பிரவாகத்தில் மொக்கை போட இன்னொருத்தர் வந்தாச்சு வந்தாச்சு வந்தாச்சு.. :))

பி.கு. : ஞாயமா இந்த போஸ்ட் போன போஸ்டுக்கு முன்னாடி போட்டிருக்கனும். கடைசி நிமிஷ சொதப்பல்களால் ஆர்டர் மாறிடுச்சு :))

இன்று முதல் இனிதே பயணிப்போம்...

வணக்கம்... இன்று முதல் இனிதே பயணிப்போம்...

நான் ரசித்த கவிதையில் எனக்கு பிடித்தது...

மேல் இமைகளில் நான்... கீழ் இமைகளில் நீ...
இந்த கண்கள் கொஞ்சம் உறங்கினால் என்ன ?...


கொஞ்சம் catchinga ஆரம்பிக்கலாம்னு நெனைசேன்...
சரி சரி... கண்ணை துடைசிகோங்க...

சும்மா சும்மா... :-)

சரி இப்ப காயத்ரிய கலாய்க்கலாமா... stay tuned...

பி.கு. : மக்களே.. இது நான் போட்ட போஸ்ட் இல்ல.. என் தோஸ்த்து கௌதம் (எ) சந்தோஷ் போட்டது. இன்று முதல் பிரவாகத்துல என் கூட கூட்டணி போட்டு உங்களுக்கு மொக்க போட போறான்னு தான் நான் நினைச்சேன்.. ஆனா மேல இருக்கற பதிவ பாத்தா என்னையே கலாய்ப்பான் போல இருக்கே.. இருக்கட்டும்.. அவனோட ரகசியங்கள் நம்ம கிட்ட இருக்குல்ல.. அவனை ஒரு கை பாத்துக்கலாம் ;))

பி.கு.கு. : ஹி..ஹி.. பி.கு. போட்டது மட்டும் ஜி3. :))

யார் யார் யாரிவர் யாரோ???

இவரை பத்தி நான் சொல்றத விட.. அவரே சொல்றாரு கேளுங்க.. சாரி.. படிங்க..

என் வாழ்க்கையின் goal - எப்பொழுதும் மகிழ்ச்சியாய், peacefull- அ இருப்பது - but not at others expense. I am far from an ideal person.

But என்னால எதுவும் முடியும் என்று நினைக்கிற type. தலை கணம் பிடிச்சவன் என்று கிடையாது.. cause யாராலையும் எதுவும் சாதிக்க முடியும்னு நம்புபவன் நான்.

எனக்கு கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன் character ரொம்ப பிடிக்கும். காரணம் Most of the times I am like that! Diplomacy ரொம்ப கம்மி! (அதாவது கேனத்தனமா பேசுவேன்.. அத தான் இப்படி சொல்லறேன்)

என்ன எல்லாரும் கண்டுபிடிச்சிட்டீங்களா? என்னது இன்னும் இல்லயா? சரி.. உங்களுக்காக இன்னொரு க்ளூ.. இவரோட காதலி பற்றி இவர் எழுதிய கவிதை :

யாரிவள்?
கவிதை கொஞ்சம் காவியம் கொஞ்சம்
கலந்தவள் அவள்..

ஆண் பாதி பெண் பாதி
சிவன் வீட்டில்..
அவள் முழுமை நான் வெறுமை
என் வீட்டில்..

தூண்டில் புழு
மீனுக்கு ஏங்குமா?
அவளுக்காக காத்திருக்கும்
நான்..

அவள் வருகையில் விடிந்து
அவள் பிரிகையில் மடியுது
என்நாட்கள்.

நான் காதல் பேச..
அவள் கண்ணீர் பேசுகிறாள்..
பேசும் வார்த்தைகளை
திருடி
மௌனம் தருபவள்.

பிரிந்து செல்வோம் என்று
போகையில்
என்னை அழைத்து சென்று விட்டாள்..
நானின்றி நான்..

கண்ணெட்டும் தூரம் வரை
நான் காண்பதெல்லாம் அவள்..
யாரிவள்?
என்னவள்!

அட.. இப்போ கூடவா உங்களுக்கு ஞாபகம் வரலை??

சரி. கடைசி க்ளூ.. இவருக்கு ரொம்ப புடிச்சது...



இப்போ எதுக்கு இவரப்பத்தி இம்புட்டு பேசறன்னு கேட்கறீங்களா? இன்னிக்கு இவருக்கு பொறந்தநாளு.. நம்ம தம்பிக்கு நாம விளம்பரம் குடுக்காம வேற யாரு குடுப்பா ;))


Send this eCard !

ஜி-யின் திருவிளையாடல்

திருவிளையாடல் படத்துல தருமி கேள்வியா கேட்கும் போது அசராம நம்ம சிவன் பதில் சொல்லுவாரே அந்த சீன் உங்க எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும்னு நினைக்கறேன். இப்போ அதே சீன்ல சிவனுக்கு பதில் நம்ம காபி வித் கோபி புகழ் சச்சின் கோப்ஸீம், தருமிக்கு பதில் ஜியும் இருந்திருந்தா எப்படி இருக்கும்னு ஒரு குட்டி கற்பனை.

கோப்ஸ் : கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா?
ஜி : நான் ஒன்னும் தருமி மாதிரி முட்டாள் இல்ல.. அதனால 2 பேருமே ஆளுக்கு பத்து கேள்வின்னு பிரிச்சுப்போம். டீல் ஓ.கே.வா?

கோப்ஸ் : எனக்கு சம்மதம். நீ முதலில் கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா?
ஜி : நீயே முதல்ல கேளு. அப்போ தான் நான் அதுக்கேத்த மாதிரி என் கேள்விகளை கேட்க முடியும்.

ஜியின் மனசாட்சி : மவனெ.. இன்னிக்கு உன்ன கேள்வி கேட்டு ஓட ஓட விரட்டல என் பேரு ஜி இல்ல.
கோப்ஸின் மனசாட்சி : நீ கேள்வி கேக்க ஆரம்பிச்சதும் தான் நாங்க எஸ் ஆயிடுவோமில்ல..

கோப்ஸ் : சரி.. ஆட்டத்தை துவங்குவோம்.. சேர்ந்தே இருக்க வேண்டியது எது?
ஜி : நானும் சகிராவும்

கோப்ஸ் : சேரக்கூடாத்து?
ஜி : நானும் குவார்ட்டரும்

கோப்ஸ் : பார்க்க கூடாத்து?
ஜி : லவ்வர்ஸ் டேயில் பால் பாண்டி

கோப்ஸ் : பார்க்க வேண்டியது?
ஜி : ஜியின் வீர விளையாட்டு

கோப்ஸ் : பூமிக்கு தேவை
ஜி : பூமி தேவதைகள்

கோப்ஸ் : சிறந்த தேவதையை தேர்ந்தெடுக்க?
ஜி : சாட் பூட் த்ரீ

கோப்ஸ் : அவளைப் பற்றி ஒரு கவிதை
ஜி : உளறுதல் என் உள்ளத்தின் வேலை

கோப்ஸ் : இது கவிதையா?
ஜி : கவிதைனு சொன்னா நம்பனும்

கோப்ஸ் : புதுக்கவிதையோ?
ஜி : புதுக்கவுஜ இல்லடே.. புலிக்கவுஜ

ஜி : உன் கோட்டா முடிஞ்சிடுச்சு.. இனி என் கோட்டா.. எங்க என் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லு பாப்போம்..
கோப்ஸ் : கேள் உமது கேள்விகளை.

ஜி : சைட் அடிச்சா ஆயுசு கூடுமா?

ஜி : கிறிஸ்துமஸ் ஏசுவின் பிறந்தநாளா?

ஜி : பீட்டாவுக்கு மாறலியா?

ஜி : ஷக்கத்தா இதே மகா?

ஜி : இது மட்டும் கவிதை இல்லயா என்ன?

ஜி : பார்த்த ஞாபகம் இல்லையோ?

ஜி : யாருல இங்க சண்டியன்?

ஜி : டைட்டில வைச்சாத்தான் பதிவ படிப்பீங்களா?

ஜி : கருவறை முதல் கல்லறை வரை?

ஜி : இதெல்லாம் ஒரு பொழப்பு?

என்ன இது கோப்ஸிடம் இருந்து பதிலே காணோம்னு பாத்தா அந்த பக்கம் நம்ம கோப்ஸு தலை தெறிக்க ஓடிட்டிருக்காரு.

இப்படி பலரையும் தன் அருமையான் பதிவுகளால் அலற வைத்த ஜி-க்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் :))


Send this eCard !


பி.கு. 1 : கோப்ஸ் அவ்ளோ வேகமா ஓடினது கேள்விக்கு பயந்துனு தப்பா நினைச்சுட்டீங்களா? அவர் கிரிக்கெட் மேட்ச்ச பாக்கத்தான் அப்படி தலைதெறிக்க ஓடினாருன்னு சொன்னா நீங்க நம்பனும் :P

பி.கு. 2 : @ஜி, இந்த பிறந்தநாளோட உங்க லீவ் அக்கவுண்ட் முடியுது. சீக்கிரம் உங்க ப்ளாக ரீ-ஓபன் பண்ணுங்க.