எல்லாரும் கேட்டுக்கோங்க மக்களே..

ஆன்லைன் வந்த கொஞ்ச நேரத்துல பிங் பண்ண எல்லாருமே கேட்ட ஒரே கேள்வி சிவிஆர் கல்யாணத்துக்கு போனீங்களானு தான். சரி. ஒட்டுமொத்தமா பதிவாவே போட்டு எல்லாருக்கும் சொல்லிடலாம்னு தான் இந்த பதிவு. உண்மைய சொல்லனும்னா நாங்க சிவிஆர் கல்யாணத்துக்கு போகவே இல்லை. பின்ன என்னங்க பின்ன. அர்த்த ராத்திரில(5.30-6.30) மூகூர்த்தம் வைச்சா எப்புடிங்க போறது. அதனால மொத நாளே ரிசெப்ஷனுக்கு போயிட்டு வந்துட்டோம் :) மொய் பணத்துக்கு நிறைய பேர் பணம் குடுத்திருந்தாலும் கல்யாணத்துக்கு... சாரி ரிசெப்ஷனுக்கு போனது நான், கப்பி, ஜேகே & இம்சை அரசியோட ரங்கமணி (பிரபு) மட்டும் தான்.

எல்லாரும் 7.30 மணிக்கு மண்டபத்துக்கு வந்துடலாம்னு ப்ளான் எல்லாம் ரொம்ப தெளிவா போட்டோம். போட்ட ப்ளான் படி மக்கள் எப்போ நடந்துட்டிருக்காங்க சொல்லுங்க?? நம்ம கப்பி மொத ஆளா மண்டபத்துக்கு 6.30 மணிக்கே வந்து உட்கார்ந்துட்டாரு. நான் எப்பவும் போல சமத்தா சொன்ன நேரமான 7.30க்கு போனேன். வண்டிய நிறுத்தும் போதே முன் தினம் பார்த்தேனேனு பாட்டு செமையா அலறிட்டிருந்துது. ஆஹா.. சவுண்ட் எஃபெக்ட் சூப்பரா இருக்கேனு நினைச்சிக்கிட்டே கப்பிய தேடினா அவர் கூலா சிவிஆரோட தம்பி கூட உட்கார்ந்திருந்தாரு. அந்த அப்புராணிய இதுக்கு முன்னாடி பாத்தப்போ என்னைய கவிதை எழுதறவங்கனு கப்பி போட்ட பிட்ட கரெக்டா ஞாபகம் வைச்சிருந்து அதை வைச்சே கலாய்க்க ஆரம்பிச்சாங்க :( மத்த மக்கள் எல்லாம் எங்கனு கேட்டா ஜேகேவும் பிரபுவும் 7 மணிக்கு தான் கிளம்பினாங்களாம். ஒரு 8.30மணிக்கு தோராயமா வந்துடுவாங்கனு தகவல் சொன்ன கப்பி, மொய் கவர் போய் வாங்கிட்டு வந்துடுறேன்னு கிளம்பி போனாரு... போனவரு போனவரு தான்.. அரை மணி நேரம் ஆகியும் வரலியேனு ஃபோன் பண்ணா இதோ மண்டபம் கிட்ட வந்துட்டேன்றாரு. எங்க போய் யாரை சைட் அடிச்சிட்டு வந்தாருனு யாம் அறியோம் பராபரமே !!!

நான் பாட்டுக்கு ஜாலியா அந்த அரைமணி நேரம் பாட்டு கேட்டுட்டு இருந்தேன். ஆர்க்கெஸ்ட்ரா மக்கள் சூப்பரா பாடினாங்க. அந்த காலத்துக்கு பலே பாண்டியா முதல் இந்த காலத்து அயன் பாடல்கள் வரை எல்லா பாட்டுமே கலக்கலா பாடினாங்க. மேடை அலங்காரங்களும் சூப்பரா இருந்துது. ஒரு வழியா கப்பியும் ஜேகேவும் 8 மணிக்கு வந்து சேந்தாங்க. சரினு கப்பி வாங்கிட்டு வந்த கவர்ல பணம் குடுத்த எல்லார் பேரையும் எழுதலாம்னு ஆரம்பிச்சா, சிவிஆரோட தம்பி என்னங்க கவிதை எழுதறீங்களானு கேட்டாரு (அப்பாவி லுக்கோட :(( ).. கப்பியும் சும்மா இல்லாம ஆமாங்க இங்க பாருங்க ஒண்ணு கீழ ஒண்ணா எழுதறாங்கனு (நிறைய பேர் இருந்ததால வரிக்கு நாலு பேர்னு எழுதினது ஒரு குத்தமாய்யா???) ஏத்தி விட.. தனியா வந்து சிக்கிட்டியே ஜி3ன்னு எனக்கு நானே ஃபீல் பண்ணிக்க வேண்டியதா போச்சு.

ஒரு வழியா 8.30 மணிக்கு நம்ம பிரபு வந்து சேர்ந்தாரு. அவர பாத்ததும் கப்பி ரொம்ப சந்தோஷமா “அப்பாடா இனி சாப்பிட போலாம்னு” சொன்னாரு (நிற்க. பின்னூட்டத்துல வந்து யாராவது இது நீங்க சொன்ன டயலாக் தானேனு சொன்னீங்கனா பாரபட்சமின்றி உங்கள் கமெண்ட் நிராகரிப்படும் என்பதை மிகத்தாழ்மையுடன் கூறிக்கொள்(ல்)கிறேன் :P). சரினு எல்லாரும் கூடி பேசி கிப்ட குடுக்கலாம்னு போய் லைன்ல நின்னா, அவ்ளோ நேரம் நல்ல பாட்டா பாடிட்டிருந்த ஆர்கெஸ்ட்ரா கும்பல், அப்போனு பாத்து “அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சலை”னு சோக ராகம் பாட ஆரம்பிக்கறாங்க. கப்பி அப்படியே அந்த சிட்டுவேஷனுக்கே போய் ஓவர் சோகமா ஒரு ரியாகஷன் குடுக்க, ஜேகே “மாப்ள நாம அப்படியே தள்ளாடிக்கிட்டே தான் மேடைல ஏறனும்”னு சொல்ல கச்சேரி சூப்பரா கலை கட்டுச்சு :)

மேடைல போய மணமக்களுக்கு வாழ்த்துக்கள சொல்லிட்டு முக்கியமான வேலையான சாப்பாட்டு பந்திய நோக்கி போயாச்சு. சாப்பிடும்போது ஜேகே நல்லாவே “பக்கத்து இலைக்கு பாயசம்” கேட்டாரு. என்ன... மனுஷன் பாயசத்துக்கு பதில் தயிர் சாதத்த கேட்டுப்புட்டாரு :(( இதுல சாம்பார் சாதத்துக்கு பதில் பிசிபெல்லாபாத் குடுத்துட்டாங்களாம். எனக்கு சாதம் போட்டு சாம்பார் ஊத்தினாதான் ஒத்துக்குவேன்னு அடம் வேற :(. என்ன கொடுமை சார் இது!!! ஒருவழியா சாப்பிட்டு முடிச்சிட்டு கைகழுவிட்டு வரும்போது கப்பி ”சாப்பிடறப்போ யாரோ என்ன பாத்து கை அசைச்சாங்க. அவர எங்கயோ பாத்த மாதிரி இருக்கு”னு சொல்லிக்கிட்டே வர.. அங்க பாத்தா எங்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்த அபர்ணாவோட ப்ரெண்ட் உட்கார்ந்திருந்தாரு. சரி அவர பாத்து ஒரு வணக்கம் சொல்லலாம்னு அவர் சாப்பிட்டுக்கிட்டிருந்த பந்திகிட்ட போக, நாங்க அப்போதான் சாப்பிட வர்றோம்னு நினைச்சு ”இங்க வந்து உட்காருங்க”னு பந்தி பரிமாறிட்டிருந்தவங்க கூப்பிட, ஜேகே ரொம்ப பொறுப்பா “அவங்க ஏற்கனவே ரெண்டாவது ரவுண்ட் சாப்டுட்டாங்க”னு சொல்லி ஓவரா டேமேஜ் பண்ணிட்டாரு :(((((((

அப்பாலிக்கா நானும் ஜேகேவும் ஜஸ்க்ரீம் சாப்பிட, கப்பியும் பிரபுவும் பீடாவோட டின்னர முடிச்சிக்கிட்டாங்க. அப்புறம் என்னங்க.. பொறுப்பா எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்கு கிளம்பி போயாச்சு.

இவ்ளோ பெரிய பதிவ போட்டுட்டு மணமக்களுக்கு வாழ்த்த சொல்லலனா எப்படிங்க..



பி.கு. : அடுத்த கல்யாண ட்ரிப்புக்கு இப்பவே டிக்கெட் எல்லாம் புக் பண்ணியாச்சு. அப்படியே அதை ஒரு சுற்றுலா ட்ரிப்பா மாத்தலாம்னு ஒரு ஐடியா இருக்கு. ஆகையால் மக்களே... உங்களுக்கு தெரிஞ்சு நாகர்கோவில் சுற்றுவட்டாரத்துல ஏதாவது நல்ல இடங்கள் சுத்தி பாக்கற மாதிரி இருந்தா தகவல் சொல்லுங்க :))) நீங்க தரப்போற தகவலுக்கு முன்கூட்டியே ஒரு நன்றி சொல்லிக்கறேன் :)))