And, Now....



கவிதையும் அல்லாத
மொக்கையும் அல்லாத
பதிவு ஒன்று என் கண்ணில் பட்டது
அது என்ன என்று புரியாமலே
பின்னூட்டமிட்டுவிட்டு வந்தேன்

வெகுசுவாரஸ்யமாய் இருந்தது
அதை தொடர்ந்து வந்த பதிவுகள்

எப்படியோ நானும் இணைந்துவிட்டேன்
அந்த பதிவு தொடரில்..
அதன்மூலம் அந்த கும்மி குழுவிலும் !!!

ஆச்சியின் ஒரிஜினல் பதிவு

தொடர்ந்த கும்மி பதிவுகள்..

ஆயில்ஸ் அண்ணாச்சி

நிஜமா நல்ல அண்ணாச்சி

நட்புடன் ஜமால்

தமிழ் ப்ரியன்

நான் ஆதவன்

தமிழன் - கறுப்பி

முத்துக்கா

கானா பிரபா அண்ணாச்சி

ஸ்ரீமதி தங்கச்சி

ஒரு தொடர்பதிவும் ப்ளாஷ்பேக்கும்...

மறுபடி ஒரு தொடருக்கு இரவீ அழைச்சிருக்காரு. சிம்பிளா நாலு கேள்வி மட்டும் தான் கேட்டிருக்காரு ;-)))

1. அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?

நமக்கு பிடித்த மனதிற்கு இதம் தரும் விஷயங்கள் என்றுமே அழகானவை தான். உதாரணத்துக்கு சொல்லனும்னா குழந்தையின் குறும்பு, பெற்றோரின் பாசம், நண்பர்களின் அக்கறை... எல்லாமே அழகு தான். இந்த அழகுகள் நிரந்தரம் தான் ஆனா நம் மனது எப்போதும் அதை அழகாய் பார்க்குமாங்கறது சந்தேகம் தான்.

2. காதல் மனிதனுக்கு அவசியமா?

திருமணத்திற்கு பின் மனைவியிடம் கணவனுக்கும், கணவனிடம் மனைவிக்கும் காதல் கண்டிப்பாக அவசியம் தான்.

3. கடவுள் உண்டா?

நம்புகிறவர்களுக்கு உண்டு. நம்பாதவர்களுக்கு இல்லை. நான் நம்புகிறேன் :-)

4. பணம் அவசியமா?

ஆடம்பரமாய் வாழும் அளவிற்கு தேவையில்லை என்றாலும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பணம் அவசியம் தேவை :)

இந்த தொடரை தொடர நான் அழைப்பவர்கள்,

கில்ஸ் - உங்கள கோத்து விடாம ஒரு டேக்கா???

திவ்யப்ரியா - எப்படியும் கில்ஸ் உங்கள கோத்துவிடுவாரு. அதுக்கு பேசாம நானே முந்திக்கறேனே ;-)))

பொற்கொடி - ரொம்ப நாள் கழிச்சு ஆக்டிவ் ஆகியிருக்கீங்க.. ஒழுங்கா இந்த பதிவ தமிழ்ல எழுதி போடுங்க :-)


போன வாரம் அப்பா அம்மாவோட ஷாப்பிங் போயிட்டு பாண்டிபஜார்ல இருக்கற அஞ்சப்பர்க்கு சாப்பிட போயிருந்தோம். 2 வருஷம் முன்னாடி கிட்டதட்ட இதே சமயத்துல ப்ளாக் நண்பர்களோட அங்க போய் அடிச்ச கூத்தெல்லாம் ஞாபகம் வந்துடுச்சு.. (@இராம், உங்க பேவரைட் மட்டன் சுக்காவும் மறக்காம ஆர்டர் பண்ணி சாப்பிட்டேன் :))) ) திரும்பி வீட்டுக்கு வந்ததும் அந்த மீட் பத்தி போட்டிருந்த பதிவ படிச்சு பாத்தேன். அப்படியே டைம் மிஷின்ல ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி போயிட்ட மாதிரி இருந்துச்சு. அதன் மீள்பதிவு இங்கே...

உங்க எல்லாருக்கும் வீக் எண்ட் எப்படி போச்சு? நாங்க சூப்பரா இங்க ஒரு ப்ளாக்கர் மீட் போட்டு என்சாய் பண்ணிட்டோமில்ல... நம்மளுக்கு ட்ரீட் குடுக்கறதுக்குன்னே இம்சை அரசி, ஜி, இராம் 3 பேரும் பெங்களூர்ல இருந்து சென்னை வந்திருந்தாங்க.. சனிக்கிழமை நைட் ஷிப்ட்ல இருக்கும் போதே இராமண்ணே "நீங்க நாளைக்கு காலைல நல்லா தூங்குங்க.. மதியம் 12 மணிக்கு ஒரு வேக்-அப் கால் குடுத்து எழுப்பி எங்க எப்போ மீட்டிங்னு சொல்றேன்" னு சொல்லிட்டாரு.. சொன்ன மாதிரியே சமத்தா 12.30க்கு கால் பண்ணி பாண்டி பஜார் அஞ்சப்பருக்கு 1.30க்கு வந்துடுங்கன்னு சொல்லிட்டாரு.. நாமலும் ரொம்ப சுறுசுறுப்பா 1.40க்கெல்லாம் அங்க போய் நின்னா ஒருத்தரையும் காணோம். எங்க ராசா இருக்கீங்கன்னு போன் பண்ணா இங்க தான் டி.நகர்ல சுத்திட்டிருக்கோம்.. நீங்க போய் எல்லாருக்கும் டேபிள புக் பண்ணுங்க..நாங்க வந்துடறோம்ன்னு கூலா சொல்றாரு.. சரி.. எத்தன பேருக்குன்னு கேட்டா.. நாங்க 3 பேர் (இராம், ஜி, கப்பி) இருக்கோம் இங்க.. இம்சைக்கு ஒன்னு.. உங்களுக்கு 2.. ஆக மொத்தம் 6 பேருக்குங்கறாரு.. ஆஹா. ஆரம்பமே இப்படியான்னு நெனைச்சிக்கிட்டு போய் டேபிள்க்கு சொல்லிட்டு வெயிட் பண்ணேன்..

பொறுமையா இவங்க 3 பேரும் வந்து சேந்தாங்க.. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு இம்சை, சிபி & ஜே.கே வந்து சேந்தாங்க.. சரின்னு 6 பேர்க்கான டேபிள் வேணாம் 7 பேருக்கு வேணும்னு சொன்னா மறுபடியும் அவன் எங்கள வெயிட்டிங்க்ல போட்டுட்டு 3 மணிக்கு தான் டேபிளே குடுத்தான்.. அதுக்கப்புறமும் ஆர்டர் பண்ணதெல்லாம் லேட் லேட்டா தான் வந்துது.. (இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் வீட்லயே ஒரு ரவுண்ட் சாப்டுட்டு வந்திருப்பேன் :( ) அப்பவும் சாதம் போட்டுட்டு அதுக்கு குழம்பு குடுக்க லேட் பண்ணதால நம்ம ஜி பசி பொறுக்க முடியாம வெறும் சாதத்தையே சாப்பிட ஆரம்பிச்சிட்டாரு..இதுல கப்பி மட்டும் வெஜிட்டேரியன்ங்கறதால அவருக்கு மட்டும் எல்லாம் கரக்டா வந்துடுச்சு.. என்ன அருமையான சாம்பார்.. பேஷ்.. பேஷ்-ன்னு சொல்லி எங்கள நல்லா வெறுப்பேத்திக்கிட்டே சாப்பிட்டாரு மனுசன்.. இதுல ஆர்டர் பண்ண பெப்சி வரவே இல்ல, என்னன்னு கேளுங்க தலைன்னு இராம உசுப்பேத்தி விட, அவரு கப்பிய உசுப்பேத்த, கப்பியும் உடனே அங்க ஆர்ட்ர் எடுத்தவர கூப்பிட்டாரு.. சரி.. நல்லா திட்ட போறாருன்னு பாத்தா.. நாங்க 2 பெப்சி ஆர்டர் பண்ணோம்.. சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள கொண்டு வந்து குடுத்துடுங்கன்னு மரியாதையா பேசுறாரு :(

இப்படியே எல்லாம் லேட்டா வந்தாலும் பாஸ்டா காலி பண்ணிட்டு டெஸர்ட்ஸ்ல பர்ஸ்டு ரவுண்டு எல்லாரும் ஜீஸ் சாப்பிடலாம்னு 7-அப், லைம் சோடான்னு ஆளுக்கொன்னு ஆர்டர் பண்ண நம்ம சிபியும் ஜே.கேவும் 7-அப்ல உப்ப போட்டு குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. ஆஹா..இது நல்லா இருக்கே.. இருங்க ஜே.கே. உங்களுதுல நான் கொஞ்சம் உப்ப போடறேன்னு சொன்னா.. அங்க இருந்து கப்பி.. உப்பிட்டவரை உள்ளளவும் கலாய்-னு பழமொழி எல்லாம் எடுத்து விடறாரு.. அடப்பாவிங்களா.. நீங்க இப்போ கலாய்க்கறதையே தாங்க முடியலியே.. இதுல உப்ப போட்டு நானே அதை உசுப்பேத்தனுமான்னு ப்ரீயா விட்டுட்டேன்... ஆனா கப்பி கை கழுவப்போன கேப்ல அவரொட லைம் சோடால சிபி உப்ப அனாயாசமா அள்ளி கொட்ட.. கப்பி அதையும் அசராம குடிச்சிட்டு உப்ப கொட்டினா நாங்க குடிக்காம விட்றுவோமான்னு டயலாக் அடிக்கறாரு.. சரி.. என்னமோ பண்ணுங்கன்னு நாங்க அடுத்த ரவுண்ட் ஐஸ்க்ரீம் ஆர்டர் பண்ணோம்... இராம் உஷாரா எங்க இப்பவே அடுத்தவங்களோடதுல இருந்து எடுத்தா நம்மளுதுலயும் பங்குக்கு வருவாங்களேன்னு சுறுசுறுப்பா அவரோடத காலி பண்ணிட்டு அப்புறம் மத்தவங்களுதுல கைவரிசைய காமிக்க ஆரம்பிச்சிட்டாரு.. சிபி வேற நான் பட்டர்ஸ்காட்ச் ஆர்டர் பண்ணேன்.. பட்டர் வந்துடுச்சு ஸ்காட்ச் எங்கப்பான்னு பீல் பண்ணிட்டிருந்தாரு..

இப்படியே எல்லாரும் கலாட்டா பண்ணிட்டிருந்தோம்.. பில் வந்ததும் இம்சையும் கப்பியும் நீங்க தான் பில்ல கட்டணும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கை காட்ட.. கொஞ்ச நேரம் அப்படியே சண்டை போட்டுட்டு அப்புறம் சின்ன தம்பி பெரிய தம்பி ரேஞ்ச்ல நான் கட்டறேன்னு 2 பேருமே கார்ட நீட்ட ஆரம்பிச்சிட்டாங்க.. கடைசில இம்சை பெரிய மனசு பண்ணி விட்டுகுடுத்ததால கப்பியே பில்ல கட்டிட்டாரு :))

கரெக்டா எல்லாரும் அங்க இருந்து கெளம்பும் போது ராஜி வந்து எல்லாருக்கும் ஒரு வணக்கம் சொன்னாங்க.. அவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு அங்க இருந்து கிளம்பி அடுத்த லொகேஷனான நடேசன் பார்க்குக்கு போனோம்.. அங்க நவீன் ப்ரகாஷும் தேவும் வந்து ஜாயின் பண்றேன்னு சொல்லி இருந்தாங்க.. அவங்க வர்றதுக்குள்ள ஏதேதோ பேச ஆரம்பிச்சு ரஜினி முதல் பின்நவீனத்துவம் வரை எல்லா டாபிக்கையும் டச் பண்ணிட்டோம்.. இராம் அவர் கேமராவ வெச்சு வானம், மரம், புல், ஹெல்மெட்டு, சுருக்கு பை கயிறுன்னு ஒன்னு விடாம எல்லாத்தையும் போட்டோ எடுத்து எனக்கும் போட்டோ புடிக்க தெரியும்னு சீன் போட்டுட்டு இருந்தாரு.. கவிதைன்னா என்னன்னு சொல்லுங்க இராம்னு கேட்டா ரொம்ப நேரம் கஷ்ட்டப்பட்டு சமாளிச்சிட்டு கடைசில க.வி.தை. = கவிதைன்னு சொல்லி முடிச்சிட்டாரு..

இப்படி கலாட்டாவா ஓடிட்டிருக்கும் போதே நவீன் வந்தாரு.. அவர தூரத்துல பாத்தப்பவே நம்ம சிபி கையெல்லாம் ஆட்டி இங்க வாங்க இங்க வாங்கன்னு கூப்பிட்டாரு.. என்ன மேட்டருன்னு பாத்தா நவீனோட கைல இருந்த வாட்டர் பாட்டில வோட்கா பாட்டில்னு தப்பா நெனைச்சிட்டாராம் ;)

கப்பி ஹோட்டல்ல சாப்பிடும் போதே தேவ் இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவாருன்னு சொன்னாரு.. பார்க்குக்கு வந்தே 1 மணி நேரம் ஆகுதே.. அவரு எப்போ வருவாருன்னு கேட்டா நாங்க எப்பவுமே ஒரே பேச்சு தான்.. அவரு வீட்ல இருந்து கிளம்பின அரை மணி நேரத்துல வந்துடுவாருங்கறாரு.. பாத்தா கொஞ்ச நேரத்துல அவரே கால் பண்ணிட்டாரு.. கப்பி உடனே ரொம்ப உற்சாகமா அண்ணே நான் உங்கள பாத்துட்டேன் நேரா வாங்கன்னு சொல்ல அதுக்கு அந்த பக்கம் என்ன சொன்னாங்கன்னு தெரியல.. அப்படியே அமைதியாயிட்டாரு.. போன வெச்சப்புறம் என்ன மேட்டருன்னு கேட்டா அவரு குடும்பத்தோட வர்றாராம்.. குடும்பம் கிளம்ப லேட் ஆகுதாம்.. சீக்கிரம் வந்துடறேன்னு சொன்னாரு.. சோ, இன்னும் ஒரு அரை மணி நேரத்துல வந்துடுவாருன்னு திரும்ப அவரு பழைய பல்லவிக்கே போயிட்டாரு :)) அப்புறம் கொஞ்ச நேரத்துல தேவும் வர இன்னும் கொஞ்ச நேரம் கதை அடிச்சிட்டு ஒரு 6 மணிக்கு மேல நானும் இம்சையும் கிளம்பிட்டோம்..

மீட்ல நாஸ்தியாக வேண்டிய இராமோட கேமரா ஏதோ போன ஜென்மத்து புண்ணியத்துனால தப்பிச்சிடுச்சு.. அதை பக்கத்துல இருந்த கல்லுல அடிச்சு உடைக்கப்போறென்னு இம்சை சொல்ல.. எங்க உங்களுக்கு தில் இருந்தா ஒடைங்க பாப்போம்.. நான் நாலணா பெட் கட்டறென்னு கப்பி சொல்ல.. ஜி என்கிட்ட 2 நாலணா இருக்குன்னு எடுத்து நீட்ட.. தேவ் "நான் கூட 5 பைசா போட்டு 30 காசா பெட் வைக்கறேன்"னு சொல்ல.. இதுக்கெல்லாம் வாய்ப்பே குடுக்காம இராம் அவரு காமராவ பத்ரமா எடுத்து வெச்சிக்கிட்டாரு :(




எல்லாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !!!

ஆதவன்...

சமீபத்துல ட்ரெய்லர் எல்லாம் போட்டு கலக்கறானே.. சூர்யா வேற சூப்பரா இருக்கான். சரி பாட்டை கேட்டு தான் பாக்கலாம்னு நெட்ல தேடினா பாவி மக்கா இன்னிக்கு சாயந்திரம் தான் ஆடியோவே ரிலீஸ் பண்றானாம்.. அதுக்கு முன்னாடியேவாடா ட்ரெய்லரு ???? நல்லா இருங்கடே !!!!

நான் பார்த்த ட்ரெய்லர் நீ(ங்க) பார்க்க இங்கே (நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை பாட்டு ட்யூன்லயே படிக்கனும் :-P)

அன்பே வா...

விஜய் டீவில அப்பப்போ ஏதாவது ஒரு காதல் கதைய சூப்பர் பில்டப்போட ஆரம்பிக்கறது வழக்கம். அப்படி இப்போ லேட்டஸ்ட்டா ஆரம்பிச்சிருக்கறது தான் அன்பே வா தொடர். தொடர் சமீபத்துலதான் ஆரம்பிச்சிருக்குங்கறதால தொடரைப்பத்தி இப்போதைக்கு ஏதும் கருத்து சொல்றமாதிரி இல்லை. ஆனா அதுல சந்தியானு ஒரு கேரக்டர். ஒன் சைட் லவ்ல அம்மணி அப்பப்போ கவிதையா அள்ளித்தெளிக்கறாங்க. அதுல இருந்து சில கவிதைகள் இங்கே பதிவாக..

சூரியன் கூட
ஓவியம் வரைகிறது.. !
உன் நிழல்... !!

என்
ஆயுள் உள்ளவரை
உன் காதல் வேண்டும்... !
இல்லையேல்...
உன் காதல் உள்ளவரை
எனக்கு
ஆயுள் போதும்.. !



எனக்குள் இருப்பது யாரென
எங்கெங்கோ தேடினாய்
உன் வீட்டின் பூட்டிய அறைக்குள்
நீ தொலைந்து போயிருப்பது
தெரியாமல்...

உலகெல்லாம் ஓடி
உன் காதல் நீ தேட...
பத்திரமாய் உன் காதல்
ஒளிந்திருக்கும் எனக்குள்!!!
நீதான் நான் என
நான் கண்டுகொண்டேன்...
நாந்தான் நீயென
நீ அறிவதெப்போது... ?


உலகம் என்னை
உதறிய போதெல்லாம்
புன்னகைத்து நின்றேன்...
பற்றிக்கொள்ள உன் கரம்
இருக்கிற தைரியம் எனக்கு...

நீ என்னை
வேண்டாமென்றாலும்
என்னாலும் உதற முடியும்...
உன்னையல்ல..
என் உயிரை!!!


வார்த்தை இல்லாமல்
வாய்ப்பு இல்லாமல்
உன் வட்ட விழி பார்க்க
இயலாமல்...
சொல்லாத காதலொன்று
சிக்கிக் கிடக்கிறது
என் நெஞ்சுக்குழிக்குள்

நீயே சொல்லிவிடேன்...
காதலை
முன்மொழியத்தான்
முடியவில்லை..
வழிமொழிந்தாவது
வருகிறேன்!!!


வலிகள் கூட சுகமானதுதான்
நீ தருகிற போது...
பிரிவுகள் கூட சுகமானதுதான்
உன் நினைவுகள் உடனிருக்கும்போது...
அழுகை கூட சுகமானதுதான்
உனக்காய் நான் அழும்போது...
வார்த்தையாய் காதலைச் சொல்வதில்
உடன்பாடில்லை எனக்கு...
வாழ்க்கையாய் அதை
வாழ்ந்து காட்டுகிறேன்
ஒரு வாய்ப்பு கொடேன்... !


நான் சிரித்தேன்.. நீ சிரித்தாய்...
நான் அழுதேன்.. நீ அழுதாய்...
நான் காயப்பட்டேன்.. நீ கண்ணீர் சிந்தினாய்...
நான் காதலிக்கும்போது
ஏன் கண்மூடிக்கொள்கிறாய்?
உன் மௌனம் சம்மதமா...
இல்லை
மறுதலிப்பா?

கடல் சேர முடியாத நதிகள்
மீண்டும் மலை திரும்புவதில்லை
காய்ந்து போவதைத் தவிர
அவற்றிற்கு
வேறு வழியுமில்லை... !

பனிவிழும் மலர்வனம்...

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அர்ச்சனையை முடித்துவிட்டு பிரகாரத்தை சுற்றிக்கொண்டிருந்த பவித்ரா தன் கோபத்தை அடக்க மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தாள். காலை 6 மணிக்கு கோவிலுக்கு வருவதாக சொன்ன சங்கர் இன்னும் வந்து சேரவில்லை. கோவிலில் கோபப்படக்கூடாது என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டே கோவிலை சுற்றிக்கொண்டிருந்தாள்.

சங்கர் வர்றதுக்குள்ள இவங்களை பத்தி ஒரு சின்ன இண்ட்ரோ.. சங்கரும் பவித்ராவும் ஒரே அலுவலகத்தில் கடந்த மூன்று வருடமாய் காதல் செய்து வருகிறார்கள். அட ஆமாங்க. அலுவலகத்துல இவங்க வேலை செய்யறதை விட காதல் செய்யற நேரம் தான் அதிகம். சங்கர் வீட்டிற்கு ஒரே பிள்ளை. பிள்ளையின் ஆசையே பெற்றோரின் ஆசைன்னு அவங்களும் இவங்க காதலுக்கு பச்சை கொடி காட்டிட்டாங்க. பவித்ரா...
அட இதோ சங்கர் வந்துட்டான். இனி இங்க நடக்கறத நீங்க பாருங்க. நான் கேப் கிடைக்கறப்போ வந்து இண்ட்ரோவ கண்டினியூ பண்றேன்.

தன் முன் வந்து நின்ற சங்கரை முறைத்துவிட்டு எதுவும் பேசாமல் ஒரு தூணின் அருகே சென்று அமர்ந்தாள் பவித்ரா. சங்கர் கிடைத்த சந்தர்ப்பத்தில் சந்நிதி சென்று கடவுளுக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு வந்து அவளுடன் அமர்ந்தான்.

"சாரி சாரி சாரி" வழக்கம் போல் சங்கர் தான் மௌனத்தை கலைத்தான்.
"பேசாத நீ. நான் என்ன எனக்காகவா கோவிலுக்கு வர சொன்னேன். உன் பிறந்தநாளுக்கு உனக்காக அர்ச்சனை பண்றப்போ நீ கூட இருந்தா நல்லா இருக்கும்னு தானே வர சொன்னேன். அதுக்கு கூட இப்படி லேட்டா வந்தா என்ன அர்த்தம்?"
"உனக்கு ஒண்ணு தெரியுமா?"
"என்ன?"
"நமக்காக நாம வேண்டிக்கறதை விட அடுத்தவங்களுக்காக நாம வேண்டிக்கிட்டா அதுக்கு பலன் அதிகம்?"
"இப்ப என்ன சொல்ல வர்ற நீ?"
"எனக்காக நான் வந்து வேண்டிக்கறதை விட நான் நல்லா இருக்கணும்னு நினைக்கற நீ எனக்காக வேண்டிக்கிட்டா அதுக்கு பலன் அதிகம். அதுக்கப்புறம் நான் எதுக்கு தனியா வேண்டிக்கணும்" என்று கேட்டவாறே அவளை பார்த்து கண்சிமிட்டினான் சங்கர்.
சற்றே யோசனையுடன், "வியாக்கியானம் எல்லாம் நல்லாதான் இருக்கு. அப்படினா நான் வேண்டினது கண்டிப்பா பலிக்குமா?" என்று வினவினாள் பவித்ரா
"நிச்சயமா"
"அப்பாடா இப்போ தான் சந்தோஷமா இருக்கு. எதுக்கும் இன்னிக்கு கொஞ்சம் நிறைய சாப்பிட்டு தெம்பா இரு நீ"
என்ன சொல்கிறாள் என்று புரியாத குழப்பத்துடன், "புரியலியே. அப்படி என்ன வேண்டிக்கிட்ட?"
"ஹிஹி.. நீ சொன்ன நேரத்துக்கு கோவிலுக்கு வராததால உனக்கு இன்னிக்கு நல்லா நாலு தர்ம அடி விழணும்னு வேண்டிக்கிட்டேன்"
மேலே பார்த்தவாறு இரு கரங்களை கூப்பி "ரொம்ப நன்றி பெருமாளே" என்றான் சங்கர்.
இப்பொழுது புரியாமல் விழிப்பது பவித்ராவின் முறையாயிற்று. "எதுக்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்ற நீ? கம்மியா வேண்டிக்கிட்டேன்னா? ஒரு வேளை 108 இல்ல 1008னு வேண்டியிருக்கணுமோ?"
"அடிப்பாவி.. அதுக்கு இல்லை. எப்பவுமே வேண்டுதலை வெளியில சொன்னா அது பலிக்காதுன்னு சொல்லுவாங்க. அப்படினா இப்போ நீ வேண்டிக்கிட்டதும் பலிக்காதில்ல.. அதான்." என்றான் கூலாக.
"அப்படியா.. பலிக்குதா இல்லையானு பாத்துடலாம்" என்றவாறே அவனை அடிப்பது போல் சைகையுடன் அவள் எழ
"ஹே.. பொறந்தநாள் அதுவுமா ஒரு அப்பாவி புள்ளைய அடிச்ச பாவம் உனக்கு வேணாம். சரி சரி மொறைக்காத. நேரமாச்சு கிளம்பலாம் வா. அம்மா உன்னை அப்படியே வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னாங்க"
"இப்பவா? இப்ப வீட்டுக்கு வந்துட்டு வந்தா ஆபீஸுக்கு லேட் ஆகிடுமே. சாயந்திரம் வரட்டுமா?"
"ஆபீஸா? அதெல்லாம் இன்னிக்கு போக வேண்டாம். உனக்கும் சேத்து நானே நேத்து லீவ் சொல்லிட்டேன். இன்னிக்கு ஃபுல்லா ஐயா கூட தான் நீ இருக்க போற" கூறிக்கொண்டே அவன் வண்டியை நோக்கி செல்ல, எதுவும் சொல்லத்தோன்றாமல் அவளும் அவன் பின்னால் நடந்தாள்.

வீட்டு வாசலில் இறங்கியதும் "ஒரு நிமிஷம்" என்று அவளிடம் சொல்லிவிட்டு வீட்டு வாசலில் சென்று நின்று "வாருங்கள் மகாராணி" என்று சேவகன் போல் சிரம் தாழ்த்தி அவளை வரவேற்க, அதை பார்த்து கொண்டிருந்த அவன் அம்மா புன்னகையுடன் "வாம்மா. நல்லா இருக்கியா?" என்று வாஞ்சையுடன் வரவேற்றார்.
"நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?" என்று கேட்டவாரே அவளும் வீட்டில் நுழைந்தாள்.
"நானும் நல்லா இருக்கேன்மா. என் புள்ளை இப்படி எல்லாம் பண்றானேனு பாத்து ஏமாந்துடாதமா. என் புள்ள ஐஸ் வைக்கறதுல கில்லாடி. நாம உஷாரா இல்லைன்னா தலைல மொளகாய் அரைச்சிட்டு அவனுக்கு ஆகவேண்டிய காரியத்தை சாதிச்சுக்குவான்".
"போச்சுடா மாமியாரும் மருமகளும் இப்பவே ஒண்ணு கூடிட்டீங்களா? கல்யாணத்துக்கப்புறம் என் கதி அதோ கதி தான் போல. அப்பா எங்கிருந்தாலும் உடனே உங்கள் பிள்ளையின் உதவிக்கு வரவும்" என்று உரக்க கத்தினான் சங்கர்.
அதை பார்த்து புன்னகைத்தவாறே அவன் தாய் "உங்கப்பா கார் இன்னும் வரலியே. ஏன்னு விசாரிச்சிட்டு வர்றேன்னு ட்ராவல்ஸ் வரைக்கும் போயிருக்காரு" என்றாள்
"ஏம்மா? எங்கயாவது வெளியில கிளம்பறீங்களா?" என்று கேட்டாள் பவித்ரா
"இவன் ஒண்ணும் சொல்லலியாமா உன்கிட்ட? இன்னிக்கு நாள் நல்லா இருக்கு. அதான் இன்னிக்கே உனக்கு கல்யாணப்புடவை எடுக்க காஞ்சிபுரம் போகலாம்னு சொல்லியிருந்தேன். கூட்டிட்டு வரப்போ அதை சொல்லலியா இவன்?"
"ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான்மா சொல்லலை நான்"

இவங்கள விட்டா பேசிக்கிட்டே இருப்பாங்க.. அப்புறம் கதை முடியற வரை நான் பவித்ரா பத்தி இண்ட்ரோ குடுக்காமலே விட்டுடுவேன் போல இருக்கு. அதனால இங்க நடுவுல புகுந்து என் வேலையை முடிச்சிடறேன். பவித்ராவுக்குனு குடும்பம் எதுவும் கிடையாதுங்க. அவளுக்கு இந்த அன்பு, பாசம், அக்கறை எல்லாம் புதுசு. தாய் தந்தை யாரென்றே அறியாமல் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து, ஒரு நல்லவரின் ஸ்பான்சர்ஷிப்பின் உதவியால் பட்டப்படிப்பு முடித்து மூன்று ஆண்டுகளுக்கு முன் சங்கர் வேலை செய்யும் அதே அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தவள் தான் பவித்ரா. அலுவலகத்தில் கிடைத்த சங்கரின் நட்பு காலப்போக்கில் காதலாய் மாறினாலும் அவளுக்குள் ஒரு அச்சம் இருக்கவே செய்தது. சங்கரின் குடும்பத்தில் சொந்த ஊர் எது என்று கூட அறியாத தன்னை மருமகளாய் ஏற்றுக்கொள்வார்களா என்று. ஆனால் முதல் முறை சங்கர் அவன் வீட்டிற்கு அழைத்து சென்ற போது அவர்கள் எந்த தயக்கமும் இன்றி முழுமனதுடன் அவளை வரவேற்றது அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அதை அவள் வாய்விட்டு கேட்கவும், அவர்கள் சிரித்து கொண்டே "எங்க பையனோட சந்தோஷம் தான்மா எங்களுக்கு முக்கியம். அவன் தேர்ந்தெடுத்த பொண்ணு நீ நல்ல குணவதியா இருக்கறப்போ எங்களுக்கு வேற எதுவுமே குறையாய் தெரியலை" என்று கூறி அவளை சமாதானப்படுத்தினார்கள். சரி இப்போ பேக் டூ கதை.

சங்கரின் அப்பா காருடன் வந்து சேரவும் நால்வரும் கிளம்பி சென்று காஞ்சிபுரத்தில் ஷாப்பிங் எல்லாம் முடித்துவிட்டு கோவிலுக்கு சென்று தரிசனங்கள் முடித்துக்கொண்டு வீடு திரும்ப இரவு ஆகிவிட்டது. சங்கர் பவித்ராவை அவள் தங்கியிருக்கும் ஹாஸ்டலில் இறக்கிவிட்டுவிட்டு,
"பிறந்தநாள் அதுவுமா எனக்கு எதுவும் பரிசு இல்லையா?" என்று ஆர்வமாக கேட்டான்.
தான் பரிசாக குடுத்த சட்டையை தானே அணிந்திருக்கிறான். இன்னும் என்ன பரிசு என்று குழப்பத்துடன் அவள் விழிக்க...
அவன் கன்னத்தை காட்டி "ஒண்ணே ஒண்ணு" என்று கேட்டான்.
அவன் நோக்கம் புரிந்து "காலைல வேண்டுதல் பலிக்காதுனு சொன்னியே இப்போ பலிக்கப்போகுது பாரு" என்று கையை ஓங்க, அவன் "போடி" என்று கூறிவிட்டு பைக்கை விருட்டென்று கிளப்பினான்.

*** முற்றும் ***

பார்த்தேன் ரசித்தேன் !!!

புத்தகங்களின் நடுவில் வரும் விளம்பரங்களில் கவனத்தை ஈர்க்கும் விளம்பரங்கள் வெகு சில மட்டுமே. சில சமயம் தாளின் வழுவழு தன்மை, சில சமயம் வசீகரிக்கும் வண்ணங்கள், சில சமயம் அதில் வரும் வாசகங்கள்னு பல காரணங்கள் இருக்கும். அது போல் இந்த விளம்பரத்தில் வந்த வாசகத்தை பார்த்ததும் இது எதற்கான விளம்பரம் என்று ஒரு முறை பார்க்க செய்த்து நிச்சயம் இந்த விளம்பரத்தின் வெற்றிதான் :)

கிளிஞ்சல்கள்... II

கிளிஞ்சல்கள்... I

பல நேரங்கள்ல நம் நண்பர்களுக்கு கிடைக்கும் வெற்றி / அங்கீகாரம் நமக்கே கிடைச்ச மாதிரி சந்தோஷத்தை குடுக்கும். எதை பத்தி சொல்றேன்னு சிலர் கெஸ் பண்ணியிருப்பீங்க. நம் சக வலைபதிவர், எங்கள் பாசமலர் சிவீஆர் அண்ணாச்சியின் புகைப்படங்கள் "Alliance Francaise of Madras" இல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் அவருடைய திறமைக்கு கிடைத்த வெற்றி இது.. இது போல் இன்னும் அவருடைய புகைப்படங்கள் பல அரங்கங்களில் இடம் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆகஸ்ட் 19-ம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது. உங்களின் வருகை அவரை நிச்சயம் ஊக்கப்படுத்தும்.

இடம் : Alliance Française of Madras
New No.24, College Road,
Nungambakkam,
Chennai 600 006.
Tel: 91 44 28279803/ 28271477

நேரம் : காலை 9 முதல் மாலை 7 வரை.
சனிக்கிழமை பிற்பகல் 1 மணி வரை.

மேலும் விபரங்களுக்கு - http://simplycvr.blogspot.com/2009/07/my-exhibition-in-alliance-francaise.html

அவருடைய புகைப்படங்கள் அனைத்தையும் காண http://www.flickr.com/photos/seeveeaar/


இப்ப எல்லாம் ஊர் சுத்தல் அதிகமாகிடுச்சு. போன வாரம் கல்பாக்கத்துல கார்னிவல் நடக்குது வாங்க ஜி3னு தோழி கூப்பிட, கட்றா பொட்டியனு கிளம்பியாச்சு. இன்சுயூரன்ஸ் ஏஜன்ஸில இருந்து நகை கடை வரை எல்லா ஸ்டாலும் இருந்துது. நல்லா ஒரு நாள் பொழுது ஓடுச்சு. ஆகஸ்ட் 9-ம் தேதி வரை இந்த கார்னிவல் நடக்கிறதாம்.


இது Giant Wheel-ல சுத்தறப்போ எடுத்தது :)


அவார்ட் நேரம் - கனகு & கில்ஸ் எனக்கு குடுத்த விருதுகள்...




ஸ்ரீவத்ஸ் குடுத்த விருது.


கனகு, ஸ்ரீவத்ஸ் & கில்ஸ் மூவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த விருதோட கேட்டகரி என் வலையுலக நண்பர்கள் எல்லாருக்குமே பொருந்துவதால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்னு இல்லாம எல்லோருக்கும் இந்த விருதை பரிசளிக்கிறேன் :))))


எதிர்பாராமல் கிடைக்கும் எந்த ஒரு பரிசும் அபரிமிதமான சந்தோஷத்தை குடுக்கும். அதுலயும் நமக்கு பிடித்த விஷயம் சம்பந்தபட்டதாகவும், கொடுப்பவர்களின் உழைப்பும் கலந்து இருந்தா.. மகிழ்ச்சிக்கு எல்லையும் உண்டோ?? என் தோழி சந்தியா அவளே பெயிண்ட் செய்து எனக்கு பரிசளித்த படம்.. என் ஃபேவரைட் பிள்ளையார் :)))))))))))))



கடைசியா ஒரு சுயவிளம்பரம் ;-) இந்த வாரம் றேடியோஸ்பதியில் சிறப்பு நேயர் பகுதியில் என் பாடல் தேர்வுகள் ஒலிபரப்பாகியுள்ளது. நீங்களும் படிக்க / கேட்க இங்கே செல்லுங்கள்.

இதே போல் உங்களுக்கு பிடித்த பாடல்களும் பதிவா வரணும்னு ஆசைப்படறவங்க, என்ன பாடல், ஏன் அந்த பாடல் பிடிக்கும்ங்கற காரணத்தோட kanapraba@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பலாம் :) நீங்களும் சிறப்பு நேயர் ஆகலாம் :)))

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!





அனைத்து வலையுலக நண்பர்களுக்கும்

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!!


பி.கு. : நாளைக்கு நான் கொஞ்சம் பிஜி. அதான் இன்னிக்கே பதிவு போட்டாச்சு ;-)))