* கே.கே.வுடன் ஒரு சந்திப்பு

வணக்கம் மக்கள்ஸ், எல்லாரும் எப்படி இருக்கீங்க? உலக அதிசயமா ஆபீஸ்ல ஆணி அதிகமாயிருச்சு.. அதான் உங்க ப்ளாக் பக்கமெல்லாம் வர முடியல.. அப்படியே கொஞ்சம் கேப் கிடைக்கும் போதெல்லாம் உங்க பதிவுகள எட்டி பாக்கறேன் :))

போன போஸ்ட்ல வந்து எல்லார் கமெண்டுக்கும் பதில போட்ட பில்லு பரணிக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ் :-))

எல்லாரும் கே.கே. மீட்ட பத்தி ஏன் இன்னும் போஸ்ட் போடலன்னு எல்லா பக்கத்துல இருந்தும் கேக்க ஆரம்பிச்சிட்டாங்க.. சரி, இதுக்கு மேலயும் லேட் பண்ணா வேளைக்காகாதுன்னு இதோ இன்னிக்கு போஸ்டறேன்..

ஸ்டார்ட் த மீஜிக் ;)

கே.கே.வ 24-ம் தேதி மீட் பண்ணலாம்னு முடிவு பண்ணதும் லொகேஷன் எல்லாருக்கும் பொதுவா எங்க டிசைட் பண்ணலாம்னு யோசிச்சோம்.. அப்போதைக்கு மீட்டுக்கு வர்றதுலயே குட்டி பொண்ணு நம்ம sagittarian ரம்யா.. அவங்க ஏரியா பக்கமா பாப்போம்.. அதனால கே.கே.நகர்ல மீட் பண்ணலாம்னு முடிவு பண்ணோம்.. அந்த ஏரியா பத்தி நமக்கு பெருசா ஒன்னும் தெரியாது.. சரி நீங்களே சொல்லுங்கன்னு சுப்பு கிட்டயும் ரம்யா கிட்டயும் பொருப்ப விட்டுட்டேன்.. மக்கள் திரும்பி வந்து சொன்ன லிஸ்ட்ட பாத்ததும் எனக்கு செம டென்ஷன்.. இருக்காதா பிண்ண?? அவங்க சொன்ன இடம் ஹாட் சிப்ஸ், சரவண பவன், வசந்த பவன், அடையாறு பேக்கரி.. அம்மா புண்ணியவான்களா? என்னதிது எல்லாம் வெஜிட்டேரியனா இருக்கு.. இதெல்லாம் விட்டுட்டு நல்ல நான் - வெஜ் ரெஸ்டாரண்ட்டா பாருங்க. அதுவும் நம்ம ரேஞ்சுக்கு இல்ல கே.கே. ரேஞ்சுக்குன்னு சொல்ல, கடைசியா முடிவான இடம் வடபழனில இருக்கற Green Park. ரம்யாவுக்காக அந்த ஏரியால மீட் வெச்சோம்.. ஆனா கடைசி நேரத்துல அவங்க வர முடியாம போயிடுச்சு :(

Location : Green Park, Time : 6.45 P.M.

நாம தான் Punctuality-இன் சிகரமாச்சே.. கரெக்டா அங்க போய் நின்னா நம்ம மக்கள்ஸ் யாரையும் காணோம்.. நம்ம ஏஸ் முன்னாடியே சொல்லி இருந்தாரு. அவரு ஆபீஸ் அதுக்கு பக்காத்துல தானாம். அதனால நாங்க எல்லாரும் வந்ததுக்கப்புறம் அவருக்கு போன் பண்ணா அவரு வந்துடுறதா.. சரின்னு அவருக்கு போன் பண்ணி வர சொல்லிட்டு மத்த மக்கள்ஸ் எல்லாம் எங்க இருக்காங்கன்னு பாக்கலாம்னு எல்லாருக்கும் லைனா கால் பண்ணா, கோல்மால் நான் இங்க தான் பக்கத்து சந்துல இருக்கேன் வந்துடறேன்னாரு. கே.கே.வோட தங்கமணிக்கு போன் பண்ணா வடபழனி சிக்னல்ல இருக்கோம் வந்துடறோம்னு சொல்லிட்டாங்க. சுப்புவுக்கு போன் பண்ணா நான் வடபழனிக்கு பதிலா கே.கே. நகர் வந்துட்டேன்.. இங்க இருந்து எப்படி வர்றதுன்னு தெரில.. சீக்கிரம் கண்டுபிடிச்சு வந்துடறேன்னு சொல்லிட்டாரு.. சரி.. எல்லாரும் பொருமமயா வரட்டும் நான் ஜம்முனு சோபால உக்காந்து அங்க இருந்த கொஞ்சம் நல்ல முகங்கள சைட் அடிச்சிட்டிருந்தேன்.. அப்புறம் வரிசையா நம்ம மக்கள்ஸ் வர ஆரம்பிச்சாங்க.. கே.கே வந்ததும் இந்த பில்டிங்க நான் வெளியில இருந்தே பாத்திருந்தா அப்படியே திரும்பி போயிருப்பேன்னு பீல பண்ண.. நாங்க அத பத்தி எல்லாம் கண்டுக்காம ஜம்முனு Buffet ஹால நோக்கி கிளம்பிட்டோம் :)

எல்லாரும் ஒருத்தர ஒருத்தர் அறிமுகம் பண்ணிக்கிட்டு பேசிட்டிருக்கும் போதே சூப் வந்துது.. அதை குடிச்சிட்டிருக்கும் போது திடீர்னு பில்லு கிட்ட இருந்து ஒரு போன். (தலைவரு மொதல்ல வரலைன்னு சொல்லி இருந்தாரு) நான் இங்க வாசல்ல இருக்கேன். நீங்க எங்க இருக்கீங்கன்னு. சரி அவர போய் கூட்டிட்டு வரலாம்னு எழுந்தா, கே.கே உடனே ஹையா பில்லு கட்ட பில்லுவே வந்துட்டாரு. நானே போய் அவர கூட்டிட்டு வர்றேன்னு துள்ளி குதிச்சு ஓடினார். பில்லு வந்துட்டு நான் உங்கள எல்லாம் பாக்கலாம்னு தான் வந்தேன். எனக்கு சாப்பாடெல்லாம் எதுவும் வேணாம்னு சொல்லிட்டாரு. சரி அவர் இருக்கும் போதே மக்களுக்கு வாங்கின கிப்ட குடித்துடலாம்னு கே.கே.க்கு அவரு ஆசைப்பட்டு கேட்ட ராஜாராம் ப்ராண்ட் வேர்கடலை பர்ஃபியும், அவரோட தங்கமணிக்கு அவரு போட்டோ பிரிண்ட் பண்ண கப்பும் (கப் எங்க மனசு மாதிரியே கொஞ்சம் பொருசா இருந்துது :))குடுத்தோம். கோல்மால் அவர் பங்குக்கு ஒரு flower vase-ம் ஒரு கார்டும் குடுத்தாரு. அத பிரிச்சதும் நம்ம கே.கே. பாத்துக்கோங்கப்பா.. இப்பவே கூஜா தூக்கிட்டேன்னு சந்தோஷமா டயலாக் அடிச்சிட்டிருந்தாரு :)

இந்த கேப்ல ப்ரீத்ஸ் எல்லார் கிட்டயும் பேசனும்னு ஆசைப்பட்டான்னு சொல்லி சுப்பு அவங்களுக்கு கால் பண்ண எல்லாரும் அவங்க கிட்ட போன்ல பேசினோம். அது முடிஞ்சதும் பில்லு சரி எனக்கு டைம் ஆச்சு.. தம்பி காத்துட்டிருப்பான்னு சொல்லி அவரு ஜூட் விட்டுட்டாரு. கே.கே.வோட தங்கமணிக்கு கொஞ்சம் வருத்தம். கே.கே ப்ளாக்ல நிறைய பொண்ணுங்க கமெண்ட்ஸ் பாத்திருக்கேன். அதனால நிறைய பொண்ணுங்க தான் வருவங்கன்னு நினைச்சேன்னு சொல்லிட்டிருந்தாங்க :)) சரி கே.கே. வ கொஞ்சம் ஓட்டலாம்னு பாத்தா வந்த மக்கள் எல்லாரும் அவரோட சேந்து நமக்கே ரிவீட் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. சரி. இதை இப்படியே விட்டா சரி வராது. நம்ம துணைக்கு Sat தான் சரியான ஆளுன்னு அவங்களுக்கு போன் பண்ண அவங்களால முடிஞ்ச உதவிய கொஞ்சம் போன் மூலமாவே பண்ணாங்க :)) அப்புறம் நம்ம வேதா கால் பண்ணி எல்லார் கிட்டயும் பேசிட்டு அப்படியே அவங்க ப்ளாக்குக்கு வந்து கமெண்ட சொல்லி சுப்பு கிட்ட அவங்க ப்ளாக்கும் ஒரு விளம்பரம் குடுத்துக்கிட்டாங்க :))

எல்லார் கிட்டயும் பேசிட்டு அப்படியே சைட்ல சாப்பிட்டும் முடிக்க நாங்க ஆர்டர் பண்ண கேக் வந்து சேந்துது. கே.கே.வோட தங்கமணி மெழுகுவர்த்திய ஊத கே.கே கேக்க கட் பண்ண எல்லாரும் அதையும் கொஞ்சம் டேஸ்ட் பண்ணிட்டு அப்படியே மீதியெ பேக் பண்ணி கே.கே. கிட்ட குடுத்துட்டோம்.. நம்ம கே.கே. பில்ல பே பண்ண, ஒரு சூப்பர் ஈவ்னிங் ஸ்பெண்ட் பண்ண சந்தோஷத்துல எல்லாரும் கிளம்பினோம்.. கிளம்பும் போது கூட கே.கே. நம்மள விடறதா இல்ல. உங்க வண்டிய நாங்க பாத்தே ஆகனும்னு வண்டி பார்க்கிங்க்கு வந்து எல்லாரும் லைனா நின்னுட்டாங்க. சரின்னு நம்ம Scooty Pep-அ எல்லாருக்கும் பெருமையா காமிச்சிட்டு அதான் பாத்துட்டீங்க இல்ல. எல்லாரும் கிளம்புங்கன்னு சொன்னா அதெல்லாம் கிடையாது அது எப்படி உங்க வெயிட்டோட மூவ் ஆகுதுன்னு பாத்தே தீரணும்னு அடம் பிடிக்க.. இதுக்கு மேல இங்க இருந்தா நமக்கு ஆப்பு பலமா வரும்னு நம்ம மனசாட்சி வார்ன் பண்ண, மீ த எஸ்கேப்..

அப்புறம் மத்த மக்கள்ஸ் எல்லாம் எப்போ கிளம்பினனங்கன்னு அவங்க தான் வந்து சொல்லனும் :)

*மீண்டும் ஒரு வாழ்த்து!!!

நேற்று (ஜுலை 23) பிறந்தநாள் கொண்டாடிய கிட்டு மாமிக்கு BELATED பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

இன்று (ஜூலை 24) பிறந்தநாள் கொண்டாடும் சீ.வீ.ஆருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

(இந்த 2 பேர் பிறந்தநாள பத்தியும் முன்னாடியே தெரிஞ்சிருந்தா அதுக்கும் அசத்தலா பதிவ போட்டிருக்கலாமே:-(( சரி.. அடுத்த வருஷம் சேத்து வெச்சு கவணிச்சுடுவோம் :))

நாளை பிறந்தநாள் கொண்டாடும் பில்லு பரணிக்கு ADVANCE பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

நானே பதிவ போட மேட்டர் இல்லாம இப்படி வாழ்த்து பதிவா போட்டு தள்ளினா இப்போ ட்ரீம்ஸ் அதுக்கும் போட்டிக்கு வந்துட்டாரு.. இருந்தாலும் இதுக்கெல்லாம் அசர மாட்டோமில்ல நாங்க :))

இந்த வாட்டி பிறந்தநாள் special பதிவு Birthday boy-யோட பேட்டி தான்.. So.. Start.. Camera. Action...

மு.கு. பதில்கள் எல்லாம் பில்லு பரணி சொன்னது தானுங்க :-))

கே : பில்லு பரணியின் புகழ் ப்ளாக் உலகம் முழுக்க பரவி இருக்கே.. இது பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?

ப : பில்லுங்கறது யாரு. என்ன குலம். என்ன கோத்திரம். என்ன வேலை பண்றார். அவருக்கு எதுக்கு என் பொண்ணை குடுக்கனும்.

மூச்சிக்கு முன்னூரு தடவை பில்லு பில்லுன்னு சொல்றாங்களே
பரணிங்கறது உங்க பேரு, பில்லுங்கறது நீங்க படிச்சி வாங்கின பட்டமா.

எல்லாம் பாகிஸ்தான் சதி. அதை முறியடித்து இந்தியாவை வல்லரசு(கேப்டன் படம் இல்ல) ஆக்குவேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.


மனசாட்சி : ஒரு கேள்வி தான கேட்டேன்.. அதுக்கு ஏன் இவரு இவ்ளோ டென்சன் ஆகுறாரு?? ஒரு வேளை மஞ்ச சுடிதார பாத்த எஃபெக்டோ???


கே : பாவ்னாவ உங்க தங்கச்சின்னு சொல்லிட்டு திரியராரே கில்ஸ்.. அவருக்கு உங்க பதில் என்னவோ??

ப : பரணி(தன்) கட்சி பாவனா என்பதை தான் அவர் அப்படி சொல்லுகிறார்.

பாவம். Gilsன் கனவு கன்னிகள் சரோஜா தேவி, கே.ஆர் விஜயா ஆகியோர்களின் படங்கள் இப்பொழுது வராதால் மனவருத்ததில் இருக்கும் அவருக்கு ஆறுதல் சொல்லுங்கள்.


ம.சா. : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... தங்கச்சிக்கு இப்படி ஒரு விளக்கமா? டி.ஆரோட தங்கச்சி செண்டிமெட்டுக்கும் இதுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டோ??? நீங்க தான் மக்களே பதில் சொல்லனும்.


கே : எக்கச்சக்கமா கவிதை எழுதறீங்க.. அதுவும் ஓவர் பீலிங்கா.. இதுக்கெல்லாம் காரணம் ஸ்மிதா, எதிர்வீட்டு ஜன்னல், etc..etc..னு சொல்லி ஒரு லிஸ்டே சொல்றாங்களே.. அந்த கவிதை எல்லாம் உண்மையிலேயே யார நினைச்சு எழுதறீங்க??

ப : கவிதைக்கு காரணமான பெண்ணை தான் தேடிக்கொண்டிருக்கிறேன். கண்டவுடன் ஒரு சிறப்பு பதிவு போட்டு எல்லோரிடமும் சொல்கிறேன்.

அதற்குள் ஸ்மிதா, ஜன்னல் என்று குதூகலமான குடும்பத்தில் கும்மி அடிச்சிடாதீங்க.


ம.சா. : இப்போதான் தேடறேன்ங்கறாரு.. குடும்பத்துல கும்மி அடிக்காதீங்கன்னும் சொல்றாரு.. ஏதோ இடிக்குதே...


கே : வ்டிவேலு ஸ்டைல்ல அடிக்கடி நீங்களும் நானும் ரௌடி தான்னு சொல்லிக்கறீங்களாமே?? நீங்க ரௌடி தான்னு நிரூபிக்க ஆதாரம் ஏதாவது வெச்சிருக்கீங்களா?

ப : எங்க ஏரியாக்கு வந்து பரணின்னு சொல்லி பாருங்க. பேரக்கேட்டாலே சும்ம்ம்மா அதிரும். அப்படியும் நம்ப முடியலன்னா சொல்லுங்க, ஆட்டோ அனுப்பறேன்.

ம.சா. : நான் வந்து சொன்னேன்.. எல்லாரும் அப்படி யாரும் இங்க இல்லன்னு சொல்லிட்டாங்க :(( பில்லுன்னு சொன்னாத்தான் உங்க ஏரியா மக்களுக்கே உங்களத் தெரியுது. என்ன கொடுமை இது கொடி??? (ஏஸ் லீவ்ல இருக்கறதால அவரு வர்ற வரை கொடி தான் :))


கே : ப்ளாக் அவார்ட்ஸ்ல எல்லருக்கும் அவார்ட் குடுத்தீங்களே.. அதுல உங்கள் நீங்களே நாமினேட் பண்ணனும்னா எந்த கேடகரில நாமினேட் பண்ணுவீங்க?

ப : ரொம்ம்ம்ம்ம்பபபபப நல்லவன்.

ஷ்ஷ்ஷ்... கேள்வி கேக்குறது ரொம்ப ஈஸி.. பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்...


ம.சா. : அது தெரிஞ்சு தானே எப்பவும் நாங்க கேள்வி கேக்கறதோட நிருத்திக்கறோம் :P


இவ்ளோ நேரம் பொருமையா பதில் சொன்னதுக்கு நன்றி ஹை.. இன்னும் ஒரே ஒரு கேள்வி.. உங்க பிறந்தநாள் ட்ரீட் எங்க? எப்போ? எத்தனை மணிக்கு?

ப : பிறந்தநாள் ட்ரீட்ட நீங்க முடிவு பண்ணுங்க.. am ready on weekday evenings.....except 25th....

ம.சா. : ஹி..ஹி.. எங்களுக்கு தெரியாதா 25-ம் தேதி பாவ்னா மேடத்துக்கு மட்டும் தான் அப்பாயிண்ட்மெண்டுன்னு :))

பி.கு. நம்ம பில்லுவுக்காக ஆர்டர் பண்ணின கேக்க அவரு பாவ்னா கூட என் பிறந்தநாள கொண்டாடிக்கறேன்னு சொல்லி தூக்கிட்டு போயிட்டாரு.. ஸோ உங்களுக்கெல்லாம் கேக் இல்லை இந்த வாட்டி.. :((


HAVE A BLASTING BIRTHDAY BHARANI!!!

Pravagam Special Awards 2007

நம்ம ப்ளாக் உலகத்துல கொஞ்ச நாளா திங்கிங் ப்ளாக்கர் அவார்டு குடுக்கறேன்னு சொல்லி எல்லாரும் எல்லாருக்கும் அவார்ட் குடுத்துட்டிருக்காங்க. நமக்கு திங்க் பண்ற அளவுக்கு அறிவும் இல்ல. யாராவது ஓவரா திங்க பண்ணி பதிவ போட்டா அது நமக்கு வெளங்கறதுமில்ல.. இப்படி இருக்கும் போது நாம எப்படி திங்கிங் ப்ளாக்கர் அவார்ட குடுக்க முடியும்னு நம்ம மனசாட்சி நம்மள கேள்வி கேக்க சரி நம்ம ப்ளாக் உலகத்துல எனக்கு புடிச்ச சிலருக்கு அவார்ட் குடுக்கலாம்னு முடிவு பண்ண, அதன் விளைவே இந்த Pravagam Special Awards 2007 :))

இந்த கேடகரில முதல் அவார்ட் வாங்கப்போறது என் தோழி தான்.. ஹி..ஹி... .::மை ஃபிரண்ட்::. தாங்க. இவங்கள பத்தி சொல்லனும்னா..

* இவங்க பேரை மாதிரியே இவங்க ப்ளாக் உலக மக்கள் பல பேருக்கு அருமையான தோழி.

* எல்லாருக்கும் நாள் ஆக ஆக வளருவாங்க.. ஆனா இவங்க ப்ரொபைல்ல இருக்கற பாப்பா மட்டும் ரிவர்ஸ்ல சின்னதாகிக்கிட்டே இருக்கும்.

* இவங்களோட ப்ளாக் உலக நண்பர் வட்டாரத்த கவுண்ட் பண்ணனும்னா உங்களுக்கு ஒரு நாள் பத்தாது. தமிழ் ப்ளாக் உலகம் தங்கிலீஷ் ப்ளாக் உலகம்னு இவங்க உலா வரும் உலகம் ரொம்ப பெருசு :)

* யாரு எங்க பதிவு போட்டாலும் நான் தான் பர்ஸ்டுன்னு ஓடி வந்துடுவாங்க. இவங்க முதல் கமெண்ட் போட வரலைன்னாலும் "நான் தான் பர்ஸ்டு - இப்படிக்கு மை ஃபிரண்டு" அப்படின்னு கமெண்ட் போட ஒரு பாசக்கார குடும்பத்தையே ப்ளாக் உலகத்துல சேத்து வெச்சிருக்காங்க.

* ஒத்த ஆளா சளைக்காம தொடர்ந்து 101 கமெண்ட் அடிச்சு ஆடின சாதனையாளர் இவங்க. அந்த சாதனைய இங்குட்டு பாருங்க... இந்த சாதனைக்கு அப்புறம் கும்மி என்றால் .::மை ஃபிரண்ட்::. , .::மை ஃபிரண்ட்::. என்றால் கும்மி என்றாகிவிட்டது :)

* நான் g-talk-ல என்ன சொன்னாலும் காமெடியாவே பேசறேன்னு சொல்லி என்ன வெச்சு காமெடி பண்ற உயர்ந்த உள்ளம்.

* தங்கச்சிக்கா, மலாய் டீச்சர், மலேசிய டூரிஸ்ட் கைட், ப.பா.சங்கத் தலைவி,.. இப்படி இவங்களோட அவதாரங்கள சொல்லிக்கிட்டே போகலாம்..

I proudly welcome our all time friend .::My Friend::. to collect her award on this very special day (என்ன special-னு கேக்கறீங்களா? ஹீ..ஹீ.. இன்னிக்கு (22nd July) தாங்க அவங்க பிறந்தநாள் :)))




As You Celebrate
Your Birthday

Here's hoping that your Birthday
is a time that's set apart-
A time that's filled with happiness
and sunshine in your heart.
And may the warmth and love you give
return to you all year,
to brighten days
in many ways
and fill your heart
with cheer.

Wishing you a future that holds....
Joy in full measure, memories to treasure,
laughter to cheer you, faithful friends near you,
deep thoughts that inspire and all that your heart desires.


MAY YOU HAVE A VERY SPECIAL
AND WONDERFUL DAY!.

HAPPY BIRTHDAY .:: MY FRIEND ::. !

P.S. ஹி...ஹி.. எப்பவும் போல G3 பண்ணினது தான் from a greeting card :-)))

Last but not the least .:: My Friend ::. -ukaaga Special b'day cake ;-)))



*வாழ்க்கைத்துணை


Concepta சொன்ன கொஞ்ச நேரத்துலயே கவிதையா இதை எழுதி அசத்திய வேதாக்கு Hats off... பரணி correct-ஆ தான் award குடுத்திருக்காரு :))

இதுவே நம்ம கவிதாயினி காயத்ரியின் கைவண்ணத்தில்...

*மீண்டும் ஒரு காதல் கதை

பரணியால் உருவாக்கப்பட்ட சந்தியாவும் கார்த்தியும், ப்ரியாவால் காதலர்களாய் மாறி, கொடியின் கொலை வெறியால் கெட்ட கனவில் சிக்கி, அருணின் உதவியால் மீண்டு, அம்பியின் வில்லதனத்தால் வில்லங்கமான சந்தர்ப்பத்தில் சந்தித்து, மை ஃபிரண்ட்டின் உதவியால் ஜோடி சேர்ந்திடுவோம் என்று நம்பும் வேளையில், கோப்ஸின் சதி திட்டம் அவர்களை பிரிக்க, ட்ரீம்ஸின் புண்ணியத்தில் மீண்டும் இணைகின்றனர்.

ஏதாச்சும் சிக்கல் வந்து காதல் கஷ்டத்துல வந்தா ஜி3ய காண்டாக்ட் பண்ணுங்கன்னு சொல்லி என்னை வம்புல மாட்டிட்டு போயிட்டாரு ட்ரீம்ஸ்.. :((

இனி...

பேப்பர பாத்த உடனே ரொம்ப அவசரமா கார்த்தி எனக்கு போன் பண்றாரு...

கார்த்தி : அக்கா, எனக்கு ஒரு வழி சொல்லுங்கக்கா...

நான் : ஏண்டா அவசர குடுக்கை.. எதையுமே பொறுமையா யோசிக்க மாட்டியா நீ? அவ என்ன சொன்னாளோ அதை அப்ப்டியே ரிப்பீட் பண்ணு..

கார்த்தி : "இருங்க கார்த்தி, முழுசா கேளுங்க. ஆனா, இது எனக்கு புரியும் முன்னே, எங்க வீட்டுல எனக்கு வேற ஒரு பையனுக்கு நிச்சியம் பன்னிட்டாங்க..."

நான் : இது புரியும் முன்னேன்னா? புரிஞ்சப்புறம் என்ன பண்ணான்னு கேட்டியா? இல்லாட்டி நிச்சயதார்த்தம் முடிஞ்சப்புறமும் அவனை கல்யாணம் பண்ணிக்காம ஏன் நீ இருக்கற ஊர்ல தான் வேலை வேணும்னு கேட்டு வாங்கிட்டு வந்தான்னு கேட்டியா?
போடா போ.. போய் அவ கிட்டயே எல்லா விவரத்தையும் முழுசா கேளு

*************************************************
இனி அங்க என்ன நடக்குதுன்னு நானும் உங்கள மாதிரியே வேடிக்க பாக்க வந்துட்டேன் :-))

ஓவர் டூ கனடா - சந்தியா வீடு..


சந்தியா குறும்பு பார்வையுடன் அவனின் முகமாற்றங்களை ரசித்துக்கொண்டே,

சந்தியா : என்ன சொல்றாங்க?

கார்த்தி : உன் கிட்டயே எல்லாத்தையும் கேக்க சொல்றாங்க... அவங்க சொல்றத பாத்தா background-ல எக்கசக்க விஷயம் நடந்திருக்கும் போல தெரியுதே..

சந்தியா : ம்ம்ம்ம்.. என் விருப்பத்த கேக்காமலே எங்க வீட்ல ஹரிய எனக்கு நிச்சயம் பண்ணிட்டாங்க.. எனக்கு சுத்தமா அதுல விருப்பமே இல்ல.. ஏன்னு உக்கார்ந்து யோசிக்கறப்போ தான் என்னையும் அறியாம என் மனசுக்குள்ள நீ வந்துட்டத புரிஞ்சிக்கிட்டேன். எங்க வீட்ல என் கருத்துக்கு யாருமே முக்கியத்துவம் குடுக்கல.. அப்போ நீ எங்க எப்படி இருக்கங்கற விவரமும் தெரியாததால என்னால ரொம்ப உறுதியாவும் பேச முடியல.. சரின்னு நேரா அந்த ஹரிகிட்டயே பேசினேன். நான் சொன்னதும் தொல்லை விட்டுதுன்னு நினைச்சாரோ என்னமோ.. அவரே அவங்க அப்பா அம்மா கிட்ட பேசி கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டாரு.. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு நம்ம காலேஜ் மேட் மூர்த்தி தான் நீ இங்க இருக்கற விவரம் சொன்னான்.. ப்ரியாவும் இந்த ஊர்ல தான் இருக்காங்கறதால வேலையை இங்க ட்ரான்ஸ்பர் பண்ணிக்கிட்டு வந்துட்டேன்..

அனைத்தையும் ஆச்சர்யத்துடனும் ஆர்வத்துடனும் கேட்டுக்கொண்டிருந்த கார்த்தியின் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்.. தனக்காக இவள் இவ்வளவு நாள் காத்திருந்து தன்னை தேடி வந்திருக்க்கிறாள் என்று நினைக்கும் பொழுதே அவனுள் மகிழ்ச்சி ப்ரவாகமாய் பொங்க.. அதே சந்தோஷத்துடன்,
"கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா?
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?"
என்று பாட, நாணத்தில் தலை குனிகிறாள் சந்தியா.

நாள் முழுவதும் அவள் வீட்டிலேயே பொழுதை கழித்து விட்டு, இரவு அவன் வீட்டிற்கு திரும்புகிறான். அன்று முழுவதும் நடந்தவற்றை மனதில் அசை போட்டுக்கொண்டே கார்த்தி காரை ஓட்டிச்செல்ல.. கடைசி நிமிடத்தில் தான் எதிரில் இருக்கும் blind turn-ஐ கவணிக்கிறான்.

****************************************

யப்பா பரணி.. நீங்க ஆரம்பிச்ச சங்கிலித் தொடர கடைசில உங்க கையிலயே குடுக்கறேன்.. கார்த்திய கொலை பண்ணுவீங்களோ காப்பாத்தி சந்தியாவோட சேத்து வைப்பீங்களோ.. உங்க இஷ்டம்.. மீ த எஸ்கேப் இப்போ...

பி.கு.1. டேக்க ஆரம்பிச்ச பரணிக்கே நான் ரூல்ஸ் சொன்னா நல்லாவா இருக்கும்??? அதனால ரூல்ஸ இங்கே போடலை :))

பி.கு.2. Blind turn - அ பத்தி ஏதாவது சந்தேகம்னா நம்ம கோப்ஸ் கிட்ட கேட்டுக்கோங்க.. அவரு தான் எனக்கு இத சொன்னவரு :))

பி.கு.3. ட்ரீம்ஸ்..... என் மேல் உங்களுக்கு ஏன் இம்புட்டு கொலை வெறி.. போன வாட்டியும் என்னைதான் மாட்டி விட்டீங்க.. இந்த வாட்டியும் என்னையே மாட்டி விட்டிருக்கீங்க.. உங்களுக்கு என் மேல எதாவது கோவம்னா நாம் பேசி தீத்துக்குவோம்.. இதுக்கு மேல நான் தாங்க மாட்டேன்.. அழுதுருவேன் :-((

கல்யாணமாம் கல்யாணம்

மொதல்ல உங்க எல்லாருக்கும் ஒரு பெரிய்ய்ய்ய்ய நன்றி சொல்லிக்கறேன்.. போன பதிவுல நீங்க எல்லாரும் அடிச்ச கும்மிக்குத்தான் :-)) ஆனாலும் முழுசா சந்தோஷப்பட முடியாத மாதிரி நம்ம கோப்ஸ் வந்து நீ எல்லா பின்னூட்டத்துக்கும் பதில் போடனும் இல்லாட்டி ஒரு கொலை விழுகும்னு ஒரே மிரட்டல்.. பாவம் ராசா குழந்தை (ஹி..ஹி.. நான் தான் :-))) கொஞ்சம் concession குடுப்பான்னு கேட்டப்புறம் சரி பொழச்சுப்போ.. யார் யார் எவ்ளோ பின்னூட்டம் போட்டான்னு எண்ணி சொல்லுன்னு சொல்லிட்டாரு.. நம்ம பதிவுக்கெல்லாம் ஒழுங்கா வந்து பின்னூட்டம் போடறவங்கள பகைச்சிக்க முடியுமா சொல்லுங்க.. So, கணக்கெடுத்ததுல Top 10 result மட்டும் இங்கே உங்களுக்காக..

ட்ரீம்ஸ் - 464
ப்ரியா - 454
கே4கே - 410
கோப்ஸ் - 363
வேதா - 298
இம்சை - 263
.:: மை ஃபிரண்ட் ::. - 234
ஜி3 - 151
ரம்யா - 127
அருண் - 119

முதல் முறையாக என் பதிவிற்கு வந்த இம்சை, கோபிநாத், மின்னுது மின்னல் மற்றும் தமிழ்பித்தன் அவர்களுக்கு என் நன்றிகள் :-))

சரி. இப்போ நம்ம மெயின் மேட்டருக்கு வருவோம்... ஹி..ஹி.. எல்லாம் நம்ம கே.கே. கல்யாணத்துக்கு போயிட்டு வந்த கதை தான் :) திட்டமெல்லாம் போட்டு நான், ஹேய்டி, கில்ஸ், பரணி எல்லாம் ஒன்னா காலையில கல்யாணத்துக்கு போகலாம்னு முடிவு பண்ணோம். நேத்தே SKM கிட்ட ஓவர் பந்தா. நான் உங்கள மண்டபத்துல கரெக்டா கண்டு புடிச்சிடுவேன்னு. நாங்க 9 மணிக்கு போலாம்னு முடிவு பண்ணி இருந்தோம்.. அவங்க 10 மணிக்கு வர்றதா சொன்னாங்க. சரின்னு அவங்க கிட்ட சொன்ன மாதிரி சீக்கிரம் போகலாம்னு call taxi book பண்ணி 7.40 க்கெல்லாம் வீட்ட விட்டு கிளம்பிட்டேன்.

8 மணிக்கு ஹேய்டிய கத்திபாரால pick up பண்றதா plan. பாத்தா அவங்க போன் பண்ணி நான் வர லேட் ஆகும்.. கொஞ்சம் காத்திருங்கன்னு சொல்லி ஒரு அரை மணி நேரம் காத்திருக்க வெச்சிட்டாங்க. அவங்க வர்றதுக்குள்ள் கில்ஸ் குறுந்தகவல் அனுப்பி நான் நேரா மண்டபத்துக்கு வந்துடறேன். அங்க meet பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாரு. சரின்னு ஹேய்டி வந்ததும் call taxi பரணி வீட்ட நோக்கி கிளம்புச்சு.. (போன மூணு bloggers meet-க்கு அவரு வராம ஏமாத்தினதால இந்த வாட்டி வீட்டுக்கு போயே அவர கூட்டிட்டு போயிடலாம்னு முடிவு பண்ணோம்.. பின்ன மொய் வெய்க்கறது அவரு department இல்லயா ;-))) Trafficla மாட்டினதால அவரு வீட்டுக்கு போக கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.. அதுக்குள்ள ஒரு குறுந்தகவல்.. எங்கயாவது சாப்பிட போயிட்டீங்களான்னு.. இல்லங்க உங்க வீட்டுக்கு தான் சாப்பிட வர்றோம்னு நாங்க பதில் அனுப்ப அவர் வீட்டுக்கு போனதும் சாப்பிட வாங்கன்னு ஒரே பாச மழை.. ஐயா சாமி.. அதெல்லாம் கே.கே கல்யாணத்துல சேத்து சாப்டுக்கலாம்னு அவர சமாதானப்படுத்தி அங்க இருந்து கிளம்பினோம்.

நாங்க trafficla மாட்டி போய் சேர்றதுக்குள்ள SKM-ம் கில்ஸ்-ம் வந்துட்டாங்க. நல்ல வேளை. நாங்க நுழையும்போதே SKM என்னை கூப்டுட்டாங்க. அவங்கள தேடற வேளை மிச்சம்;-) அப்புறம் ஒரு அரை மணி நேரம் கதை அடிச்சிட்டு மாப்பிள்ளைய பத்தி கமெண்ட் அடிச்சிட்டு தாலி கட்டி முடிச்சதும் மேடைக்கு போனோம், வந்ததுக்கு ஒரு வணக்கம் சொல்லலாமேன்னு.. ம்ஹூம்.. மனுஷன் குனிஞ்ச தலைய நிமிரவே இல்ல. அப்புறம் அங்க ஒரு கால் மணி நேரம் நின்னோம். அப்பவும் அவரு கண்டுக்கற மாதிரி இல்லே. சரின்னு நாங்களே அவர கூப்பிட்டு வாழ்த்து சொன்னோம். நாங்க யாருன்னு கவணிச்சாரான்னு கூட தெரியல.. சிரிச்சிக்கிட்டே மண்டைய ஆட்டிக்கிட்டு gift-அ மட்டும் வாங்கிக்கிட்டாரு. இதுல ஹேய்டி வேற சும்மா இல்லாம என்ன தெரியுதா? நான் தான் ஹேய்டின்னு சொல்ல அவரு அதுக்கும் சிரிச்சிக்கிட்டே மண்டைய ஆட்டினார்.. Future-க்கு இப்பவே பயிற்சி எடுத்துக்கறாரோ??

சரி.. இதுக்கு மேல இவருக்கு மரியாத குடுத்தா வேலைக்காகாதுன்னு நாங்க எங்க வேலைய பாக்க dining hall-க்கு போயிட்டோம். ஹி..ஹி.. மெனுவெல்லாம் சொல்லி உங்க வயித்தெரிச்சல நான் கொட்டிக்க மாட்டேன்.. So அந்த section skip. சாப்பிட்டதும் நம்ம கில்ஸ் சும்மா இல்லாம மேல போய் கே.கே.க்கு டாடா சொல்லிட்டு போலாம்னு எங்க எல்லாரையும் திரும்ப மணமேடைக்கு கூட்டிட்டு போனாரு.. அங்க நாங்களும் ஒரு 4-5 வாட்டி கே.கே-ன்னு கூப்பிட்டு(கத்தி) பாத்தோம்.. மனுஷன் நிமிரவே இல்லயே.. அதுக்குள்ள அவங்க ஏதோ அப்பளம் வச்சி அடிச்சு விளையாட ஆரம்பிச்சிட்டாங்க. இது தான் சாக்குன்னு கே.கே. பொண்ண மொத்து மொத்துன்னு மொத்திட்டாரு. அந்த பொண்ணு பாவம்.. அப்பளத்தால அவர அடிக்கவே கஷ்டப்படறாங்க.. எப்ப தான் கே.கே.வ பூரிக்கட்டையால அடிக்கற அள்வுக்கு முன்னேறுவாங்களோ? அனேகமா அவங்களுக்கு training நாம தான் குடுக்கனும் போல :))

இனி எங்க பக்கம் கே.கே திரும்ப மாட்டாருன்னு தெள்ளத்தெளிவா புரிய நாங்க ஜம்முனு வீட்டுக்கு கிளம்பி வந்துட்டோம் :))

அருணின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் :-)

வகுப்பறையே களை கட்டி இருந்தது.. அருணுக்கு இன்னைக்கு பிறந்தநாள். எல்லாரும் வழக்கமா கலாட்டா பண்ற மாதிரியே இன்னைக்கும் வகுப்புல கலாட்டா பண்ணிக்கிட்டு நடு நடுல அருணுக்கு எப்படி speciala வாழ்த்தறதுன்னு discuss பண்ணிடிருந்தாங்க. இந்த பிறந்தநாள் கொண்டாட்ட சந்தோஷத்த நாம கெடுக்க வேணாமேன்னு நம்ம முதல்வர் கார்த்தியும் வகுப்புல பாடம் எடுக்க வேணாம்னு சொல்லிட்டாரு. எப்பவும் நாட்டாமை கூடவே சொம்ப தூக்கிட்டு வர்ற அருண் பிறந்தநாள் அதுவுமா நல்ல புள்ளையா கோயிலுக்கு போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு லேட்டா தான் வர்றாரு வகுப்புக்கு.. அருண் வகுப்புக்குள் நுழைய அதுவரைக்கும் அவருக்காகவே காத்திருந்த அவரோட கட்சி மக்கள்ஸ் எல்லாம் அவர சூழ்ந்துக்கறாங்க..

இனி அங்க என்ன நடந்ததுங்கறது உங்களுக்காக Live relay.

நாட்டாமை : May all your dreams come true னு எல்லாரும் wish பண்ணுவாங்க, நான் என்ன wish பண்ணரேன்னா may Everbody's dream about you come true this year, உங்களுக்கும் சீக்கிரம் தங்கமணி வந்து next b'day அவங்களோட celebrate panna வாழ்த்துகிறேன்

அருண் : நன்றி நாட்ஸ் :-)

கில்ஸ் : The best thing about birthdays is that..the more you have the longer you live...may u have many many more birthdays..happy bday saga :)

அருண் : Thanks saga :-)

கே.கே : May all your dreams come true in this year. நம்ம ரெண்டு பேருக்கும் நிறைய விஷயத்தில் ஒற்றுமை இருக்கு... so அதை continue பண்ண.. சீக்கிரம் கல்யாணம் பிராப்திஹஸ்து :) Wish you many more Happy returns of the day Saga! :)

அருண் : Thanks saga.. ஆனாலும் இப்படி வாழ்த்தறேன் பேர்வழின்னு சாபம் குடுத்திருக்க வேணாம்.. இருந்தாலும் நல்லா இருங்க :-))

BSK : "தல நம்ம college figures(?!!) எல்லாம் நலம். உங்க Oppice ல எப்படி?
Birthday'க்கு எப்படி Bacardi'ya? Vodka'va இல்ல நம்ம நாட்டு "கலாச்சார" படி பட்ட சாராயம் தானா?? :)
எதுவா இருந்தாலும் அளவோட குடிங்க. அடுத்த நாள் Oppice போகனும்ல? :)
சரி இந்தாங்கோ என்னோட wishes: "WISH MY SENIOR A VERY THALLAADRA BIRTHDAY!"

அருண் : அவ்வ்வ்வ்வ்... Thanks ba :-)) Oppice ல எல்லாரும் சூப்பரா இருக்காங்க ஆனா யாரும் நம்மளதான் கண்டுக்கமாட்டேங்கறாங்க :-((

Bacardi, Vodka ன்னு பேர கேட்டதும் ராமுக்கு ஏக உற்சாகம்.. உடனே அவரும் ஒரு கவுஜைய எடுத்து விடறாரு.

ஊஞ்சல் அனுப்பிய ஓலை கண்டு களிப்புற்று,
வாழ்த்துப்பா வடிக்கக்கலாம் என
பேனா'க்கள் இல்லாத விரல்நுனிகள்
தட்டச்சு தொடங்கியது!!!!

என்னான்னு கேட்கிறீங்களா?? இது ஒடைச்சு ஒடைச்சு எழுதிருக்கோமில்ல!! இது கவிஜ!!

ஊர்ஸ்,
பொங்கி வரும் பீரை போலே,
ஏக் கலப்'க்கே கிக் ஏத்தும்
ஒல்ட்மங்க்'னெ,
அஞ்சு வட்டம் விட்டாலும்
மறுநாள் சிக்கல் - அதிகம்
ஆகாத கருப்பு பூனையினை
மஜா'வா மப்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

இதுவும் கவிஜ! கவுஜ'தான் யாராவது இல்லன்னு சொன்னா புலி உரும ஆரம்பிச்சிரும் ஆமாம்....:)


அருண் : ஊர்ஸ், இந்த பேரெல்லாம் கேட்டதுக்கே கொஞ்சம் மப்பாத்தான் இருக்கு.. நன்றி ஊர்ஸ் :-)

Side gapla நம்ம Sat entry குடுக்கறாங்க..

Sat : Have a great blast this B'day'
Keep blogging…keep rocking
And try not to mess with the good people of blogsville :P (er…that's us)
Wish you a very happy birthday!

அருண் : Thanks Sat.. ஆனாலும் பிறந்தநாள் அதுவுமா ஒரு பச்சபுள்ளைய மிரட்டறது சரியில்ல.. சொல்லிட்டேன்.

Tension ஆன அருண cool பண்ண நம்ம அம்பி ஒரு வாழ்த்து கவிதையோட வர்றாரு.

அருணோதயமாய் மாமதுரையில் உதயமாகி,
குளுகுளு பெங்களூரில் கும்மி அடித்து விட்டு
அம்சமாய் அன்னிய நாட்டில்
நம் தமிழ்மணம் பரப்பும்
எனதருமை தம்பியே!

கத்திரிகாயும் உன் கை பட்டு மணக்கும்!
காரிகையர் நெஞ்சங்களும் உன்னை எண்ணி மகிழும்!
படைத்திடுவாய் நீ பல காவியங்கள் பதிவுகள் என்னும் பெயரால்!
வாங்க மாட்டாய் நீ பல பல்புக்கள், பன்னு என்னும் பெயரால்!

எனதருமை சிஷ்ய(கே)கோடியே!
ஒத்தையாய் இருக்கும் நீ, விரைவில்
நாம் இருவர், நமக்கிருவராய் மாறிடுவாய்!
பரவட்டும் நின் புகழ்!
வாழ்க நீ பல்லாண்டு!

அருண் : அவ்வ்வ்வ்வ்.. குருவே.. உங்கள் அன்புக்கு நான் அடிமை.. நன்றி.. நன்றி.. :-))

டு.டி : அட்டா என்னதிது இங்கிட்டு தலைவி நான் ஒருத்தி இருக்கேன். நான் வாழ்த்த வாய்ப்பே குடுக்காம நீங்களே வாழ்த்திட்டிருக்கீங்க?
Arun!!!!
MANY MORE HAPPY RETURNS OF THE DAY


அருண் : Thanks DD :-)

சுமதி : HOPE YOUR SPECIAL DAY
BRINGS YOU ALL THAT
YOUR HEART DESIRES,
A DAY FULL OF PLEASENT SURPRISES
HERE IM WISHING YOU A
VERY VERY HAPPY BIRTH DAY.


அருண் : Thanks Sumathi :-)

நாங்களும் english-ல சூப்பரா வாழ்த்துவோமேன்னு கிட்டு மாமாவும் மாமியும் வர்றாங்க

A friend of yours told us
today's your special day
hope that it is perfect
in each and every way

Have a joyous celebration
with loved ones ever near
and tender hugs and kisses
to last you through the year

Our wish for you is happiness
and all your dreams come true
there is no other person
who deserves it more than you ( ceiling idikka pogudhu, parakadhe)

Have a wonderful Birthday!
seekiramee good wife prapathi rasthu :)

அருண் : நீங்களுமா?? ரொம்ப thanks கிட்டு மாமா & மாமி :-)

உடனே Harish அங்க ஆஜர் ஆகி இவங்க எல்லாம் english-ல கவிதை சொன்னா நான் கதையா சொல்லி அத ஒரு தனி பதிவாவே போட்டிருக்கேன். இங்க வந்து பாருன்னு கூட்டிட்டு போய் காட்றாரு.

அருண் : அவ்வ்வ்வ்.. ரொம்ப நன்றி நண்பா.. இதை நீ நிஜமாவே செஞ்சிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும். ;-)

அடடா அநியாயத்துக்கு english வாடை வீசுதேன்னு யோசிச்சிக்கிட்டே நம்ம Dreamzz அடுத்து screenல entry ஆகறாரு.

எத்தணையோ தேடி
கிடைத்தரியா நட்பு இது
பிறந்த நாள் வாழ்த்து
விடிந்து விட்ட பொழுது இது
Wish you a very Happy Birthday. Arun!


அருண் : நன்றி Dreamzz :-)

ராஜி : கத்திரிக்காய postல ஆரம்ம்பித்தேன் உங்கள் பதிவுகளை படிக்க
அதன் பிறகு வளர்ந்தது என் blog உலக நட்பு வட்டாரம்
Thanks for that…
Many many many many more happy returns of the day …Have a wonderful year ahead!

அருண் : Thanks ராஜி :-)

பொற்கொடி : அடடே அருணுக்கு ஒரு வயசு கூடிடுச்சு! :D எனனை போலவே நீங்களும் நல்லா ஊர் சுத்தி summer ensaai பண்றீங்க... அதே போல bday-யும் ensaai பண்ண என மனமார்ந்த வாழ்த்துக்கள் :-) அடுத்த bday உங்க தங்க்ஸோட கொண்டாடுங்க ;-)

அருண் : நன்றி கொடி. ஏன் தான் எல்லாரும் என் மேல இம்புட்டு கொலவெறியோட இருக்கீங்களோ?

ப்ரியா :அருண், Wish you many more happy and healthy returns of the day. இந்த வருஷம் உங்க ஆசைகள், கனவுகள் எல்லாம் நிஜமாக வாழ்த்துக்கள். அடுத்த வருஷம் பிறந்தநாளை உங்க தங்கமணி தன் கையால் செய்த கேக்குடன் கொண்டாட வாழ்த்துக்கள் (single candle போதும், இல்லாட்டி கேக் மேல இடம் பத்தாது :-))

(கவிதை எல்லாம் எழுதி வாழ்த்தலாம்னு ஆசை தான். சரி, b'day அன்னிக்கு பாவம் உங்களை கொடுமை படுத்த வேண்டாம்னு தான் simple அ வாழ்த்திட்டேன்.)

சரி, party எங்கேன்னு சொல்லுங்க, வந்துடறோம்.


அருண் : ரொம்ப thanks ப்ரியா. party தான.. குடுத்துடுவோம் :-)

கோல்மால் கோபால் : hello.....ARUN..........
Here's wishing you a wonderful life filled with love and happiness...........
HAPPY B'DAY....Have fun !! *humming the happy b'day song*

அருண் : Romba thanks நண்பா :-)

நம்ம பத்மப்ரியா வாயால வாழ்த்தறத விட card அ குடுக்கறது best-ன்னு அழகா ஒரு card-அ present பண்றாங்க.

அருண் : ரொம்ப அழகா இருக்கு. Thanks ப்ரியா :-)

மை ஃபிரண்ட் : நல்லவர்..
வல்லவர்.. (அதுக்குன்னு இவரை சிம்புன்னு சொல்லலை :P)
நாலும் (8 கூட தெரியும்) தெரிந்தவர்..
காமெடியில் கலக்குபவர்..
"கம் அடி"ன்னாலும் கலக்க ரெடியா இருப்பவர்..
கதை (பூ) சுற்றுபவர்..
ஊரையும் சுற்றுபவர்..
நாட்டாமை பஞ்சாயத்துக்கு செல்லும்போது செம்பு தூக்கிட்டு போவார் இவர்..
சில சமயத்துல நாட்டாமையோட பெட்டரா தீர்ப்பும் சொல்லுபவர்..
இப்படி இவரை பத்தி பாராட்டிட்டே போனாலும் எளிமையாக இருப்பவர்..

எங்கள் அண்ணன்.. க்லேவ்லண்ட் சிங்கம்..
அருணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!


அருண் : நன்றி மை ஃபிரண்ட் :-)

சச்சின் கோப்ஸ் : பிறந்த நாள் கொண்டாடும் எங்கள் அண்ணன் திரு. "அமெரிக்கா அருண்குமார்" அவர்களுக்கு என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...

தாகத்துக்கு தண்ணீரு
அமெரிக்கா அருண் இவர் பேரு
இவர் பிறந்ததோ ஜீலை ஆறு
பெயரை சொன்னாலே சும்மா அதிரும் இந்த ஊரு....
இவரை ஜெயிக்க போவது இந்த உலகத்துல யாரு?


அருண் : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... நன்றி கோப்ஸ் :-))

அடுத்த வாழ்த்து நம்ம கே4கே அண்ணனோடது. ஆனா, அவரோடத நீங்க வார்த்தையா படிக்காம அவர் குரல்லயே கேளுங்க :-)

Arun_BdWish.mp3

அருண் : ரொம்ப thanks கே4கே :-)

ரம்யா : wishing u a many more happy returns, prosperous, njyble, n the most memorable bday... பரவாயில்ல வாழ்த்த வயசில்ல அதனால இப்படி சும்மா சொல்றேன்.. நான் மேஜர் ஆனோன்னே நல்லா wish பண்றேன்.. அதுக்கு இன்னும் ஒரு 6 yrs இருக்கு...ok வா.. anyway arun, hv a great bday...

அருண் : அவ்வ்வ்வ்வ்.. பொய் சொல்றதுக்கும் ஒரு அள்வில்லையா? by the way, thanks for the wishes :-))

பரணி : Arun அண்ணாத்தே....Many More Happy Returns Of The Day :)
Single-அ இருக்கற நீங்க இந்த வருஷம் mingle ஆகி எங்களுக்கு ஒரு அண்ணிய கொண்டு வாங்க :)

Wishing this year brings you much more success and happiness :)


அருண் : u too பில்லு?? நல்லா இருங்க ராசா எல்லாரும்.. வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா :-)

ஜி : முன்பண அட்டையை துரத்திப் பிடித்த சிவாஜியே...
பனிசறு(ர)க்கு பாய்ச்சலில் ஃபிகர்களை மடக்கிய பாயும் புலியே...
ஒரு நாள் விடுமுறையின்றி ஓயாமல் ஆணி புடுங்கும் மக்களின் மத்தியில்
தாராளமாய் பதிவுக்கு ஓராண்டுகாலம் விடுமுறை அளித்த உழைப்பாளியே...
இன்னும் ஓராண்டில் தங்கமணி ரங்கமணி சங்கத்தில் இணையப் போகும் முத்தே...
அடுத்த ஆண்டில் வீராபோல் இரண்டு பூரிக்கட்டைகளில் அடி வாங்காமல்
நீ என்றும் பாஷாவாய் வாழ வாழ்த்தும் அன்புத் தம்பி
அதற்குப்பின் 'தம்பிக்கு எந்த ஊர்' என்று கேட்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்...


அருண் : நன்றி ஜி :-))

அடுத்து நம்ம குரு வேதா entry குடுக்கறாங்க

முகம் அறியா நட்பாய்,
வலைப்பூ முகவரிவழி ,
எங்கள் நட்பூக்களின் தோட்டத்தில்,
அருணனாய் உதித்தவனே!

அழகிய பதிவுகளோடு,
மெல்லிய நகைச்சுவையும்,
இரண்டற கலந்து,
அரும்பு புன்னகையை,
எங்களுக்கு அளிப்பவனே!

விண்மீன் சூழ வலம் வரும் நிலவாய்,
நலம் பல சூழ வாழ்வில் நீ வலம் வரவும்,
வரும் ஆண்டில் தங்கமணியோடும் ;)
பின் வரும் ஆண்டுகளில் மகிழ்வோடும்
நீ வாழ,
எங்கள் வாழ்த்துக்களும்,
வேண்டுதல்களும் :)

அருண் : நன்றி வேதா :-)

இவ்வளவு நேரம் மத்தவங்க வாழ்த்தி முடிக்கட்டும்னு காத்துட்டிருந்த கார்த்தி, இனியும் நம்மால காத்துட்டிருக்க முடியாதுன்னு நேரா அருண் கிட்ட வந்து அவரோட வாழ்த்த சொல்றாரு.

சிரிப்பொரு சிரபுஞ்சி - அது
சித்திர ஓவியம் - விரைவில்
பத்திரம் எழுதிட - நடந்த
விசித்திரம் மயிலே இறகொடித்தது!

இவன் சிவாஜிக்கு ரசிகன் - தலைவர்
ஸ்டிக்கர் ஒட்டி இவன் ஓட்டினான் வேன்
நியூயார்க் நகரில் - ஆச்சரியத்தில்
சொறிந்ததில் தேய்ந்து விட்டதாம்
வெள்ளையர் தம் நீள்மூக்கு

நல்ல நண்பன் - அடுத்தவர் தம்
மனம் மகிழ வாழ்வு வளம் பெற
முன்னே நிற்பான் - இவன் பார்த்தால்
ஒரு தேன் சொம்பு - பழகினாலும்
தேன் - இதை உண்மையென நம்பு

இவனுக்கு இன்று பிறந்த நாள்
எழுத போதாது வெள்ளை தாள்
இன்றே மலர்ந்த மலரின் தாள்
கொண்டு வரைகின்றேன் ஒரு வாழ்த்து!

கூடவே வாழ்த்த, பகலிலும் வந்தது
வான் நட்சத்திரம், இரவிலும் சூரியன்,
கூடவே எழுத்திலே இணைந்த
பிளாக்கர் நண்பர் கூட்டம்..

வாழ்க நண்பா! என்றும் வளமாய் வாழ்க!


அருண் : ரொம்ப நன்றி தல :-))

இப்படி எல்லாரோட வாழ்த்து மழைலயும் நனைஞ்சு மகிழ்ச்சி வெள்ளத்துல மிதந்து வெற்றிகரமா கேக் முன்னாடி வந்து சேர்றாரு. கரெக்டா கேக் வெட்டும்போது ரொம்ப இனிமையான ஒரு குரல்ல happy birthday song காத்துல மிதந்து வர, யாருடான்னு பாத்தா நம்ம காணக்குயில் மருதம் அங்க நின்னு பாடிட்டிருக்காங்க.

H'b_day.mp3

அருண் அவங்களுக்கும் ஒரு நன்றிய சொல்லிட்டு மறுபடியும் கேக்க சந்தோஷமா வெட்டறாரு.

எங்க எல்லாரும் கிளம்பிட்டீங்க? இருங்க இருங்க.. இன்னும் நம்ம புலியோட வாழ்த்துரை இருக்கே. கேட்டுட்டு போங்க.

நாகை சிவா : அவையோர்களே, ஆன்றோர்களே, சான்றோர்களே, உடன் பிறப்புகளே, கழக கண்மணிகளே,

இன்று நம் அருமை நண்பர் ஆருயிர் அருணுக்கு பிறந்தநாள், நமக்கு எல்லாம் மகிழ்வு நாள். அண்ணலுக்கு வாழ்த்துக் கூற என்னை கூப்பிட்ட போது சற்றே பயந்தேன், அகவையில் மூத்தவருக்கு நாம் வாழ்த்துக் கூறுவதா? வணங்கி மகிழ்வது தானே சரியாக இருக்கும் என பதுங்கினேன். நல்லோனே நாலு வரியாவது வாழ்த்தா விட்டால் அது நன்றாகுமா? என்ற கேள்வி கணையும் அம்பென பாய்ந்து வந்தது. அந்த அம்பும் அன்பை காட்ட சொல்லி தானே தொடுக்கப் பெற்றது என உணர்ந்து என் வாழ்த்து உரையை தொடங்குகிறேன்.
பாண்டிய நாட்டு பகல்வன், மதுரையின் மாமகன், வீட்டின் தலைமகன் எங்களின் பங்காளன் மாவீரன் அஞ்சாநெஞ்சன் அருண் 27 ஆம் அகவையில் இருந்து 28 ஆம் அகவையை தொடுகிறார். அட்லாண்டாவில் ஏறி விண்வெளியை தொட்டது போல் ஏன் இந்த ஆரவாரம் என எதிர்கட்சிகள் கொக்கரிக்கலாம், அந்தோ பரிதாபம், அந்த அறிவிலிகளுக்கு அந்த விண்வெளியை தொடவே எங்கள் விண்மகனின் ஆசியுடன் தான் சென்றார்கள் என்பது. விண்ணையும் வின் பண்ணி விண்கொண்டானாக வளைய வரும் எங்கள் வருங்காலமே நீ வாழ்க பல்லாண்டு.

வாழ்த்து, என்ன சொல்லி வாழ்த்துவது
உன் அறிவை சொல்லி வாழ்த்துவேனா
உன் பண்பை சொல்லி வாழ்த்துவேனா
அல்லது உன் திறமையை சொல்லி தான் வாழ்த்துவேனா?

மாட்டேன், அதை எல்லாம் ஊர் அறியும், உலக அறியும். அறிந்த விசயங்களை அடுக்கி என்ன பயன் ?

உன் அறியா பக்கத்தை சற்றே அறிய கொடுப்போமே....

தேனின் சுவை அறிந்து வரும் தேனீ போல, உன் சுவை அறிந்து வந்த கூடும் நண்பர்கள்
நீரையும், பாலையும் பிரிக்கும் அன்னத்தை போல அல்லன, நல்லவனற்றை நீ பிரிக்கும் பாங்கு
பீரும், நுரையும் போல, நயனும் நாட்டாமையும் போல அருணும் அடக்கமும் அமைந்தது
பள்ளியில் வந்தாய் முதலாய், பல பெண்களின் மனதில் நுழைந்தாய் முதல்வனாய்

கொடுத்த நேரமும் குறைவு, உன்னை பற்றி கூறியதும் குறைவு. ஆனாலும் மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கிலே மீண்டும் ஒரு முறையாக, திருமறையாக இன்று இருப்பதை போல மேலும் பல மடங்கு உயர்ந்து என்றும் நலமுடனும், வளமுடனும் வாழ்க எனக் கூறுவதுடன், அடுத்த அகவையை தொடும் போது உன் மனதில் குடிபெயர்ந்து சரிபாதி சரிசமமாக நிற்கும் நன்னாளாக இருக்க வேண்டும் என வாழ்த்தியும் இந்த வாய்ப்பை எனக்கு அளித்த அத்துனை நல்வுள்ளங்களுக்கும் , காய்த்ரிக்கும் என் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் கூறி விடைப்பெறுகிறேன்.

நன்றி! வணக்கம்!

அருண் : (கண்களில் ஆனந்த கண்ணீருடன்) நன்றி சிவா :-)

என்ன பாத்துட்டிருக்கீங்க இன்னும்.. போய் எல்லாரும் கேக்க சாப்பிடுங்க.. late-அ வந்துட்டு எனக்கு இல்ல உனக்கு இல்லன்னு சொல்லகூடாது சொல்லிட்டேன்.


பி.கு.1. அருண், உன்னோட பிறந்தநாள் கேக்ல எத்தனை மெழுகுவர்த்தி இருக்கனுமோ அத்தனை பேர் உன்னை இங்க வாழ்த்தி இருக்காங்க ( count பண்ணி கரெக்டான்னு சொல்லு :-))

பி.கு.2. இந்த பதிவுல போட்ட வாழ்த்துக்கள் எல்லாம் மக்களோட நிஜ வாழ்த்துக்களே... அருணோட பதில்கள் மட்டுமே என் கற்பனை. Mail மூலமா வாழ்த்துக்களை அனுப்பிய அனைவருக்கும் special thanks.

பி.கு.3. பிறந்தநாள் கொண்டாட்டத்துல எடுத்த Photos எல்லாம் பதிவுல அங்கங்க சேர்த்திருக்கேன். Photos உபயம் பத்மப்ரியா. நன்றி ப்ரியா. கடைசியா இருக்கற பெரிய்ய கேக் மட்டும் நம்ம தலைவி டு.டி. உபயம். நன்றிங்கோ :-))

பி.கு.4. யப்பா அருண். இதுவரைக்கும் நானும் 85 பதிவு போட்டிருக்கேன். ஆனா எந்த ஒரு பதிவுக்கும் இந்த அளவுக்கு யோசிச்சதில்லப்பா.. அதனால இதுக்கு நீ ஒரு treat இல்ல 4 treat தரனும் சொல்லிட்டேன்.

பதிவ முடிக்கனும்னு தான் நினைக்கறேன்.. ஆனாலும் ஏதோ ஒன்ன மறந்த மாதிரியே இருக்கே... என்னவா இருக்கும்?? ம்ம்ம்ம்??? அடடா.. அருண்,் எல்லார் வாழ்த்தையும் சொல்லிட்டு என் வாழ்த்த சொல்லாம விட்டுட்டேன் பாரு.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். Hope the upcoming days are filled with lots of sweet surprises and more happiest moments :-))

உன்னை உணராமல்..



தீவைப் போல் தனிமையில்
இருப்பதாய் வருந்தினேன்
கடலாக நீ என்னை
சூழ்ந்திருப்பதை உணராமல்