நம்ம ப்ளாக் உலகமே தூங்க ஆரம்பிச்சிடுச்சு. அதை active ஆக்கறேன் பேர்வழின்னு ஆளாளுக்கு tag create பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. என்ன கொடுமை இது சிங்கம்லே Ace!! இப்படி ஒரு வில்லத்தனத்தோட நம்ம Dreamzz ஆரம்பிச்சு என் கிட்ட ஒப்படைச்சது தான் இந்த tag.
அவரோட தேவதை தரிசனம்
இப்போ என்னோட பகுதி
***************************
மன்னவன் வந்தானடி தோழி
பாடல் வானொலியில் ஒலிக்க
ஏனோ அவன் முகம்
தானாய் மனத்திரையில் தோன்றுகிறது
அவன்!!!
அவன் பெயர் ஆதித்யன்
என் எதிர் வீட்டில் வசிப்பவன்..
யார் சொன்னார்கள்?
முகம் மனதின்
கண்ணாடி என்று
அவன் முகம் எப்பொழுதும்
துடைத்து வைத்த
பளிங்கு போல் இருக்கும்
அவன் உணர்ச்சிகளை நிச்சயமாய்
முகம் கண்டு அறிய முடியாது
அவன் மனம் விட்டு
சிரித்து நான் பார்த்தது
அவன் தமக்கையின் குழந்தையுடன்
விளையாடும் பொழுது மட்டுமே.
அவன் சிரிக்கையில்
நிச்சயம் உள்ளம் கொள்ளை போகும்!!!
என்னையும் அறியாமல்
மெள்ள மெள்ள அவன்
எனக்குள் நுழைய ஆரம்பித்தான்
அவனிடம் பேச மனம் துடித்தது
அப்படி ஒரு நாளில் தான்
அவனை கோவிலில் சந்தித்தேன்
அவனைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும்
அப்பாவியாய் கேட்டேன்
"உங்க பேர் என்ன?"
அதன் பிறகு அவன் சொன்ன
வார்த்தைகளில் என் கவனம் இல்லை
அவன் குரலின் வசீகரத்தில்
கட்டுண்டு கிடந்தேன்
அதன் பிறகு எங்கு சந்தித்தாலும்
ஓர் அழகிய புன்னகையுடன்
நலம் விசாரிக்க ஆரம்பித்தான்
பின்னர் எதேச்சையாய் ஏற்பட்ட
எங்கள் சந்திப்புகள்
திட்டமிட்டவையாக மாறி
இறுதியில்
தினசரி சந்திப்புகளாகியது
இன்று மாலையும்
கோவிலில் சந்திக்க சொல்லியிருக்கிறான்
முக்கியமான விஷயம்
பேச வேண்டும் என்று
அது என்னவாக இருக்கும்
என்று அறிந்திருந்தாலும்
ஆவலுடன் கிளம்புகிறேன்!!!
பி.கு. இந்த கவிதைய நான் எழுதறதுக்காக டிப்ஸ் குடுத்து ஒரு பதிவே போட்ட கவிதாயினி காயத்ரிக்கு சிறப்பு நன்றிகள்.
பி.கு.கு. இந்த ஆதித்யன் பெயர் வேதா பரிந்துரை. இது எதுக்கு சொல்றேன்னு உங்களுக்கே நல்லா தெரியும் :-))
பி.கு.கு.கு. Dreamzz-க்கு ரொம்ப பெரிய மனசு. அதான் அவரு சைட் அடிச்ச மக்கள நீங்களும் சைட் அடிங்கன்னு போட்டோவா போட்டாரு. எனக்கு அவ்ளோ பெரிய மனசெல்லாம் இல்லீங்க. அதனால போட்டோ எதுவும் போடலை.
சரி. இப்போ நான் வம்புக்கு இழுக்கற 3 பேர்
1. வேதா (கவிதைய வாழ வைக்க :-))
2. கில்ஸ் (பழி வாங்கும் படலம். :P)
3. அருண் (எத்தனை tag வந்திருக்குன்னு தனியா ஒரு போஸ்ட் போட போறாராம். அதுக்கு உதவதான்:-))
இது தான் ரூல்ஸ்:
1. இந்த கவிதைல வர்ற கதைய Continue செய்யனும்.
2. குறைந்த பட்சம் ஒருவரையும், அதிகபட்சம் 3 பேரையும் டேக் செய்யலாம்.
3. ரூல்ஸ எப்ப வேணும்னா மாத்த உங்களுக்கு அதிகாரம் கண்டிப்பா உண்டு..Hopefully for the better!
அவரோட தேவதை தரிசனம்
இப்போ என்னோட பகுதி
***************************
மன்னவன் வந்தானடி தோழி
பாடல் வானொலியில் ஒலிக்க
ஏனோ அவன் முகம்
தானாய் மனத்திரையில் தோன்றுகிறது
அவன்!!!
அவன் பெயர் ஆதித்யன்
என் எதிர் வீட்டில் வசிப்பவன்..
யார் சொன்னார்கள்?
முகம் மனதின்
கண்ணாடி என்று
அவன் முகம் எப்பொழுதும்
துடைத்து வைத்த
பளிங்கு போல் இருக்கும்
அவன் உணர்ச்சிகளை நிச்சயமாய்
முகம் கண்டு அறிய முடியாது
அவன் மனம் விட்டு
சிரித்து நான் பார்த்தது
அவன் தமக்கையின் குழந்தையுடன்
விளையாடும் பொழுது மட்டுமே.
அவன் சிரிக்கையில்
நிச்சயம் உள்ளம் கொள்ளை போகும்!!!
என்னையும் அறியாமல்
மெள்ள மெள்ள அவன்
எனக்குள் நுழைய ஆரம்பித்தான்
அவனிடம் பேச மனம் துடித்தது
அப்படி ஒரு நாளில் தான்
அவனை கோவிலில் சந்தித்தேன்
அவனைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும்
அப்பாவியாய் கேட்டேன்
"உங்க பேர் என்ன?"
அதன் பிறகு அவன் சொன்ன
வார்த்தைகளில் என் கவனம் இல்லை
அவன் குரலின் வசீகரத்தில்
கட்டுண்டு கிடந்தேன்
அதன் பிறகு எங்கு சந்தித்தாலும்
ஓர் அழகிய புன்னகையுடன்
நலம் விசாரிக்க ஆரம்பித்தான்
பின்னர் எதேச்சையாய் ஏற்பட்ட
எங்கள் சந்திப்புகள்
திட்டமிட்டவையாக மாறி
இறுதியில்
தினசரி சந்திப்புகளாகியது
இன்று மாலையும்
கோவிலில் சந்திக்க சொல்லியிருக்கிறான்
முக்கியமான விஷயம்
பேச வேண்டும் என்று
அது என்னவாக இருக்கும்
என்று அறிந்திருந்தாலும்
ஆவலுடன் கிளம்புகிறேன்!!!
பி.கு. இந்த கவிதைய நான் எழுதறதுக்காக டிப்ஸ் குடுத்து ஒரு பதிவே போட்ட கவிதாயினி காயத்ரிக்கு சிறப்பு நன்றிகள்.
பி.கு.கு. இந்த ஆதித்யன் பெயர் வேதா பரிந்துரை. இது எதுக்கு சொல்றேன்னு உங்களுக்கே நல்லா தெரியும் :-))
பி.கு.கு.கு. Dreamzz-க்கு ரொம்ப பெரிய மனசு. அதான் அவரு சைட் அடிச்ச மக்கள நீங்களும் சைட் அடிங்கன்னு போட்டோவா போட்டாரு. எனக்கு அவ்ளோ பெரிய மனசெல்லாம் இல்லீங்க. அதனால போட்டோ எதுவும் போடலை.
சரி. இப்போ நான் வம்புக்கு இழுக்கற 3 பேர்
1. வேதா (கவிதைய வாழ வைக்க :-))
2. கில்ஸ் (பழி வாங்கும் படலம். :P)
3. அருண் (எத்தனை tag வந்திருக்குன்னு தனியா ஒரு போஸ்ட் போட போறாராம். அதுக்கு உதவதான்:-))
இது தான் ரூல்ஸ்:
1. இந்த கவிதைல வர்ற கதைய Continue செய்யனும்.
2. குறைந்த பட்சம் ஒருவரையும், அதிகபட்சம் 3 பேரையும் டேக் செய்யலாம்.
3. ரூல்ஸ எப்ப வேணும்னா மாத்த உங்களுக்கு அதிகாரம் கண்டிப்பா உண்டு..Hopefully for the better!







