Showing posts with label விண்ணைத்தாண்டி வருவாயா. Show all posts
Showing posts with label விண்ணைத்தாண்டி வருவாயா. Show all posts

விண்ணைத்தாண்டி வருவாயா..

எல்லாரும் பதிவு போடறப்போ படத்த பாத்துட்டு நான் மட்டும் சும்மா உட்கார்ந்திருந்தா நியாயமா? அதான் நானும் கோதால இறங்கிட்டேன்.ஆனாலும் இந்த படத்துக்கு டிக்கெட் ரிசர்வ் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சு :(( செவ்வாய்க்கிழமை ராத்திரி 12 மணி வரைக்கும் முழிச்சிருந்து பாத்தும் சத்யம்ல சைட் ஓபன் ஆகும் போதே “இடம் காலி இல்லை”னு சொல்லிருச்சு. சரி நேர்ல புக் பண்றவங்களுக்காக விட்டு வைச்சிருப்பானோனு காலங்கார்த்தால 8.30 மணிக்கு கவுண்ட்டர் ஓபன் பண்றப்போ போய் கேட்டா அங்கயும் “பிம்பிலிக்கா பிலேபி”னு பல்ப குடுத்துட்டான் :(( சரினு ஆபீஸ்ல இருந்து கிளம்பி ஒரு 11 மணிக்கா ஐனாக்ஸ் போய் டிக்கெட் வாங்கலாம்னு போனா ஏகப்பட்ட பேர் எனக்கு முன்னாடி க்யூல (வேஸ்ட் பசங்க.. சத்யம் மாதிரி லேடீஸ்க்கு தனி க்யூ ஏதும் இல்லை.) இருந்த கும்பல பாத்தேன்.. டிக்கெட் கவுண்டர பாத்தேன்.. அப்பவே சனிக்கிழமை காலைல 9 மணி ஷோ தவிர்த்து மீதி எல்லாம் ஹவுஸ் ஃபுல்னு போட்டிருந்தான்.. சரி இது நமக்கு வேலைக்காகாதுனு கொண்டு வந்த் காசுக்கு லேண்ட்மார்க்ல 3 புக்க வாங்கிட்டு திரும்பி ஆபீஸ் வந்தாச்சு.

நண்பனுக்கு ஃபோன் பண்ணி இந்த சோக கதைய எல்லாம் சொன்னேன். அவன் விடுங்க ஜி3. மாயாஜால்ல நான் புக் பண்றேன்னு சொன்னான். சரிப்பானு விட்டுட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு ஃபோன் பண்ணி ஜி3 டிக்கெட் விலை 250 ரூபாயாம்.. சிம்பு படத்துக்கு இவ்ளோ எல்லாம் செலவு பண்ணனுமா.. திருவாண்மியூர் தியாகராஜா மாதிரி ஏதாவது லோக்கல் தியேட்டரே போதும் ஜி3 இவன் படத்துக்குனு ஃபீல் பண்ண, ரைட்டுனு சொல்லி காசி தியேட்டர்லயே டிக்கெட்ட புக் பண்ணியாச்சு (3 பேருக்கும் சேத்து டிக்கெட் விலை வெறும் 240 ரூபாய் தான். அதுவும் பால்கனிக்கு :)).

படம் பாக்க உள்ள் போறதுக்கு முன்னாடியே பயபுள்ள சொல்லுச்சு. என்னமோ நிஜத்துல நடக்கற மாதிரியே எடுத்திருக்கேன்னு பில்டப்ப குடுத்திருக்காய்ங்க.. அனேகமா ரெண்டு பேரையும் கடைசில பிரிச்சிருவாய்ங்கனு நினைக்கறேன்னு.. அப்பவே கொஞ்சம் உஷாராகி இருக்கனும்.. தப்பு பண்ணிட்டோம். முதல் பாதி கொஞ்சம் சுமாரா இருந்துச்சு.. ரெண்டாவது பாதி ஒரு வேளை நல்லா இருக்கும் போலனு மனச தேத்திக்கிட்டோம்.. படம் முடிஞ்சப்புறம் தான் தெரிஞ்சுது முதல் பாதியே ஓரளவுக்கு தேவலைனு !!!! என்ன கொடுமை சார் இது :(((

அதுக்குனு படத்துல உனக்கு எதுவுமே புடிக்கலியானு கேக்ககூடாது. சில விஷயங்கள் புடிச்சிருந்துது.. ஏ.ஆர்.ரஹ்மான் ம்யூசிக், படத்துல வந்த லொகேஷன்ஸ்... எப்பவும் ஹீரோ கூடவே வர்ற “மங்களம்” கேரக்டர் மாதிரி இதுலயும் ஒருத்தர் வந்து கலக்கியிருக்கார்.. காக்க காக்கல நிஜமாவே அவரு தானாப்பா காமரா மேன்??!!

எல்லாத்தையும் சொல்லிட்டு தாமரையோட பாடல் வரிகள பத்தி சொல்லாட்டி எப்படி?? படம் பாக்கறதுக்கு முன்னாடி ஹோசானா பாட்டு மட்டுமே கேட்டிருந்தேன்.. அதுவும் ஆபீஸ்ல கேண்டீன்ல போடறப்போ கேட்டது தான்.. வரிகள் அவ்வளவா கவனிச்சதில்லை (பின்ன, சாப்பிடறதுல பிசியா இருக்கறப்போ இதெல்லாமா கவனிக்க முடியும் :P).. ஆனா இன்னிக்கு படம் பாக்கறப்போ மனசுல நின்ன பாட்டு மன்னிப்பாயா தான். வரிகள் பிரமாதம்ங்கறது மட்டும் இல்ல.. ஏ.ஆர்.ரஹ்மானும் ஷ்ரேயா கோஷலும் என்னமா உருகியிருக்காங்க.. அப்படியே பாட்ட போட்டுட்டு கண்ண மூடி ரசிச்சிட்டிருக்கலாம் போல இருக்கு. வீட்டுக்கு வந்ததுல இருந்து அந்த பாட்டு தான் லூப்ல ஓடிட்டிருக்கு. கடைசியா அந்த மாதிரி கண்ணை மூடி ரசிச்சு கேட்ட பாட்டுனா அது பொக்கிஷம் படத்துல “நிலா நீ வானம் காற்று” பாட்டு தான். அதுலயும் சின்மயி வாய்ஸ்ல கேக்கும்போது ஒரு தனி கிறக்கம் தான். அதுக்கப்புறம் இப்போ இந்த பாட்டு தான்..



மொத்ததுல படம் பாத்துட்டு வெளியில வர்றப்போ ஒரு நிம்மதி.. நல்ல வேளை.. இந்த படத்துக்கு அம்புட்டு செலவு பண்ணி மாயாஜால் எல்லாம் போகலைனு !! காப்பாத்தினதுக்கு ரொம்ம்ப நன்றி ஆண்டவா :))))