கூட்டிட்டோமில்ல பஞ்சாயத்த...

வணக்கம் மக்கள்ஸ்.. என்ன? எல்லாரும் தெம்பா புது வாரத்தை ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா? உங்க ஆணிகளுக்கு நடுவுல நீங்க ரிலாக்ஸ் பண்ண வந்தாச்சு ஜி3-யோட மொக்கை போஸ்ட்.. போஸ்ட் எத பத்தின்னு நான் சொல்லனுமா என்ன?? எல்லாம் நம்ம நாட்டாமை மீட்ட பத்தி தான் :-))

சரியா சனிக்கிழமை நைட் கால் பண்ணி சென்னைக்கு ட்ரெய்ன்ல வந்துட்டே இருக்கேன்.. கூட்டுங்க நாளைக்கு பஞ்சாயத்தன்னு சொல்லிட்டாரு.. நாட்டாமை சொல்ல தட்ட முடியுமா சொல்லுங்க.. சரின்னு நானும் நம்ம மக்களுக்கெல்லாம் போன போட்டு (இந்த மாசம் இத சாக்கா வெச்சு போன் பில்ல நாட்டாமை தலைல கட்டிட வேண்டியது தான் :-))) எங்க மீட் பண்ணலாம்னு கேட்டா நம்ம வேதா இங்க அண்ணா நகர்ல சுக் சாகர்னு ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு.. அங்க மீட் பண்ணலாம்னு சொன்னாங்க.. விசாரிச்சு பாத்தா அது குஜராத்தி ரெஸ்டாரண்ட்னு நம்ம ஹேய்டி சொன்னாங்க. ஆஹா.. நாம இதுவரைக்கும் போனதில்லயே.. நாட்டாமை செலவுல ஒரு ட்ரை உடலாம்னு அந்த லொகேஷனே ஓ.கே. சொல்லிட்டேன்.. ஒரு வழியா எல்லாருக்கும் போன போட்டு 3.30க்கு வந்துடுங்கன்னு சொல்லிட்டேன்.. நமக்கு அன்னிக்குன்னு பாத்து மார்னிங் ஷிப்டு வேற.. நாட்டாமை ட்ரீட்ட நம்பி ஜம்பமா வீட்ல எனக்கு மதியம் சாப்பாடு வேணாம்னு சொல்லிட்டேன்.. நம்ம கெட்ட நேரம் அன்னிக்குன்னு பாத்து அடுத்த ஷிப்டு மக்கள் லேட்டா வர ஆபீஸ்ல இருந்து கெளம்பவே மணி 3 ஆயிடுச்சு... சரின்னு எல்லாருக்கும் மறுபடி போன போட்டு ஒரு 3.45க்கு வந்துடுங்கன்னு சொல்லிட்டு நம்ம ஸ்கூட்டில (KK அண்ட் கில்ஸ் மாட்டுவண்டினெல்லாம் படிக்க கூடாது) கிளம்பினேன்.. இருந்த பசிக்கு சூப்பர் பாஸ்ட்ல போய் 3.50க்கெல்லாம் அங்க போயாச்சு..

அங்க போனதும் வண்டிய நிறுத்திட்டு போன பாத்தா 3 மிஸ்டு கால்.. வேதா, நாட்டாமை & சிபி கிட்ட இருந்து. சிபி கிட்ட இருந்து ஒரு மெசேஜ் வேற. என்ன வெச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலியேன்னு. மெசேஜ் படிச்சிட்டிருக்கும் போதே நம்ம நாட்டாமை வந்து ஒரு வணக்கம் போட்டு அட்டெண்டஸ சொன்னாரு. சரி சிபி எங்க இருக்காருன்னு கால் பண்ணலாம்னு யோசிக்கும் போதே நாட்டாமை அங்க இருக்கறவர பாத்தா சிபி மாதிரியே இருக்கேன்னு அவரு கிட்ட போய் நீங்க தான் சிபியான்னு கேக்க அப்புறம் தான் பாத்தோம் அவரு வ.வா.சங்கம் டீ-ஷர்ட் போட்டுட்டு நிக்கறத.. அவர் கிட்ட இண்ட்ரோ குடுத்துட்டிருக்கும் போதே கோல்மால் கோபால் கால் அடிச்சு எங்க இருக்கீங்கன்னு கேட்டுட்டு நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி அவரே நான் உங்கள பாத்துட்டேன். நான் வர்றேன்னு சொல்லி போன வெச்சிட்டாரு.. பாத்தா பக்கத்துல தான் எங்கயோ சைட் அடிச்சிட்டு இருந்தாரு போல. அவர பாத்ததும் நாட்டமைக்கு ஆச்சரியம் அது எப்படி எல்லாரும் நேர்ல பாத்தா இந்த பூனையும் பால் குடிக்குமான்ற ரேஞ்ச்ல இருக்கீங்கன்னு ஒரே பீலிங்.. அவரு மட்டும் தான் பாக்க கொஞ்சம் கேடி மாதிரி இருந்தாருன்னு நான் தனியா சொல்ல வேண்டியதில்லைன்னு நினைக்கறேன் :-))

சரி. இன்னும் யாரு வரணும்னு நாட்டாமை கேக்க.. உங்க தங்கச்சி வேதா வரணும்னு நான் சொல்ல, நாட்டாமை உடனே போன போடுன்னு உத்தரவு போட்டுடாரு. சரின்னு நானும் கால் பண்ணா அவங்க 10 நிமிஷத்துல வந்துடறேன்னு சொன்னாங்க.. நாட்டாம அதுக்குள்ள சரி பக்கத்துல ப்ரூட் ஷாப் ஒன்னு இருக்காம். அது நல்லா இருக்கும்னு ப்ரெண்டு சொன்னான். நாம் அங்க போலாம். நீங்க வேதாக்கு மெசேஜ் அடிச்சிட்டு வாங்கன்னு சொல்லிட்டு அவரு சர்ருனு ப்ரெண்டு கார்ல ஏறி போய்டாரு. அப்புறம் நான் போன் பண்றதுக்குள்ள வேதாவே வந்துட நாங்க 2 பேரும் நாட்டாமையோட ப்ரெண்டு சொன்ன கடைய தேடி போய் சேந்தோம்.. அங்க போனதும் இருந்த எல்லாருக்கும் வணக்கம் சொல்லிட்டு பேசிட்டிருந்த வேதா கொஞ்ச நேரம் கழிச்சு எனக்கு இன்னும் யாரு யாருன்னே தெரியலன்னு பீல் பண்ண அவங்களுக்கு ஒரு ஃபார்மல் இண்ட்ரோ குடுத்துட்டு நான் நம்ம வேலைய பாப்போம்னு மெனு கார்ட கைல எடுத்தேன்.. அதை பாத்ததும் ஒரு குட்டி ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சு :-((

மெனு கார்ட்ல வெறும் ஜீஸ் ஐடம் தான் இருக்கு.. என்ன நாட்டாமை உங்கள நம்பி மதியம் சாப்பிடாம ஓடோடி வந்த என்ன இப்படி ஏமாத்திட்டீங்களேன்னு கேட்டா, ஒரு வேலை சாபிடலனா ஒன்னும் ஆயிடாது.. ஜூஸ ஆர்டர் பண்ணுங்கன்னு சொல்லிட்டாரு :-(( இருய்யா உன்ன திட்ட வேண்டியதெல்லாம் போஸ்டா போட்டு திட்டிக்கறேன்னு அவரு கிட்ட சொல்லிட்டு மெனு கார்ட பாத்தா அடுத்த ஆப்பு :-(( நம்ம ஃபேவரைட் ஃபல்லூடாவும் லிஸ்ட்ல இல்ல. பிஸ்தா ஃப்லேவரும் லிஸ்ட்ல இல்ல.. சரி, மெனு டைப் பண்ணும் போது தெரியாம விட்டிருப்பாங்க சின்ன பசங்கன்னு மனச தேத்திக்கிட்டு சர்வர் வந்ததும் அவரு கிட்ட கேட்டா அவரும் அதெல்லாம் எங்க கடைல இல்லன்னு சொல்லிட்டாரு.... நாட்டாமைய திட்டினதுல பாதிய அவனுக்கும் டெடிகேட் பண்ணிட்டு ஒரு வெண்ணிலா மில்க் ஷேக் ஆர்டர் பண்ணேன்.

இவரு இப்படி எல்லாம் சொதப்புவாருன்னு தெரிஞ்சு தானோ என்னமோ பாதி மக்கள் பஞ்சாயத்துக்கு வரலைன்னு முன்னாடியே எஸ் ஆயிட்டாங்க.. எஸ் ஆன மக்கள்ஸ் லிஸ்ட பாருங்க
ஹேய்டி எங்க ஆபீஸ்ல அவுட்டிங்னு ஸ்டெர்லிங் ரெஸார்ட் கூட்டுட்டு போறாங்க.. நான் அதுக்கு போறேன்னு சொல்லிட்டாங்க
பரணி எனக்கு வேற வேலை இருக்குன்னு சொல்லிட்டாரு
சசி பிரபா நான் என் ஸிஸ்டர் வீட்லயே நல்ல சாப்பாடு சாப்டுக்கறேன்னு சொல்லிட்டாங்க..
ராஜி நான் என் ப்ரெண்டோட உதயம் தியேட்டர்ல உன்னாலே உன்னாலே படம் பாக்கறேன்னு சொல்லிட்டாங்க
கில்ஸு எனக்கு வயிறு சரியில்லன்னு சொல்லி ஜூட் வுட்டுட்டாரு

ஏமாந்த மக்கள்ஸ் நாங்க தான்னு நெனச்சிக்கிட்டே எல்லாருடயும் பேசிட்டிருந்தேன். அப்போ நம்ம சசி மெசேஜ் அனுப்பினாங்க. எல்லாரும் வந்து சேந்தாச்சான்னு.. நான் ஆச்சுங்கன்னு சொன்னதும் அவங்க உடனே போன பண்ணி எங்கண்ணன் கிட்ட போன குடுங்கன்னு சொல்ல நான் பவ்யமா நாட்டாமை கிட்ட போன குடுத்துட்டேன். அவங்க கிட்ட பேசி முடிச்சுட்டு பில்லுக்கு போன போட்டு வர சொல்லுங்க.. நானே பில்ல கட்றேன்னு சொல்லி கூப்பிடுங்கன்னாரு. நான் என்ன சொல்றது நீங்களே சொல்லுங்கன்னு போன போட்டு அவர் கிட்ட குடுத்துட்டேன். அவரு அங்க பேசி முடிச்சதும் ராம் நம்ம சிபியோட போன்ல கூப்டாரு. அவரு போனுக்கு 2 ஆம்பளைங்க பேசிக்க அத யூஸ் பண்ணா புடிக்காதாம். டொக்கு டொக்குனு 2 நிமிஷத்துக்கு ஒரு தடவை அது ஆப் ஆகி அதோட கோவத்த காம்சிட்டிருந்துது. உடனே சிபி ராமுக்கு கால் பண்ணி யப்பா ராசா நீ சொர்ணாக்கா போனுக்கு (இவங்க பேசிக்க போன குடுத்து உதவறதுக்கு என்ன ஒரு பாராட்டு பாருங்க :-(() கால் பண்ணுன்னு சொல்லிட்டாரு. அவரும் நம்ம போனுக்கு கால் பண்ணி நாட்டாமை வேதான்னு எல்லார் கிட்டயும் ஓரு ரவுண்டு பேசினாரு. அப்புறம் சிபியோட மொபைலுக்கு ஜொள்ளுபாண்டி கால் பண்ணாரு. அவரு ரொம்ப நல்லவர் போல... சிபி கிட்ட மட்டும் பேசிட்டு வெச்சிட்டாரு. இந்த போனுக்கெல்லாம் நடுவுல சிபிக்கு நாட்டாமையோட தனி வழக்கு வேற.. நயந்தாராவ அவருக்கு வுட்டு குடுத்துடனுமாம்.. என்ன கொடுமை இது சிங்கம்லே ஏஸ்???

இந்த கலாட்டா எல்லாம் ஓடும் போதே ஆர்டர் பண்ண ஐடமும் வர எல்லாரும் அதை சாப்பிட்டு முடிச்சோம். முடிச்சது தான் தாமதம் நாட்டாமைக்கு இருப்பு கொல்லல.. 6 மணி ஷோ சிவாஜி படத்துக்கு டிக்கெட் ரிஸர்வ் பண்ணி இருந்தாராம். அதனால "படத்துக்கு போகனும். நயந்தாரா வையும்.. ஆள விடு" ன்னு சப்பானி ஸ்டைல டயலாக் அடிச்சிட்டு ஜூட் வுட்டுட்டாரு. அப்புறம் நான் வேதா சிபி கோல்மால் எல்லாரும் கொஞ்ச நேரம் பேசிட்டிருந்துட்டு கெளம்பினோம். இவ்ளோ நேரம் நடந்த பஞ்சாயத்துல ஒரு ஜீவன் மட்டும் வாயே தொறக்காம ரொம்ப அமைதியா ஒக்காந்திருந்துது.. கேட்டா நான் பேசறத பாத்து தான் மிரண்டுட்டாருன்னு சிபி அவருக்கு சப்போர்ட் வேற... அந்த பயந்த பாப்பா மீட் முடிஞ்சதும் வீட்டுக்கு போய் பண்ண மொத காரியத்த இங்க பாருங்க..

இதுக்கு மேலயும் சொல்றதுக்கு நிறைய விஷயமிருக்கு.. ஆனா உங்க மேல கொஞ்சம் பரிதாப பட்டு இப்போதைக்கு இத்தோட நிறுத்திக்கறேன்..

இத படிச்சப்புறமும் தெளிவா இருந்தீங்கன்னா வந்து கமெண்டிட்டு போங்க..

உங்க தலையெழுத்த யாரால மாத்த முடியும் :-)

மக்கள்ஸ்... எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் ஆச்சு போஸ்ட் போட்டு.. சரி இன்னிக்கு எப்படியும் ஒரு போஸ்ட் போட்டுடனும்னு முடிவு பண்ணி எதையாவது ஜி3 பண்ணலாம்னு பாத்தா ஒன்னும் ஒழுங்கா கிடைக்கல :-(( சைட்ல நம்ம சிவிஆர் கிட்ட சேட் பண்ணும்போது நான் கிறுக்கி வெச்சிருந்த கிறுக்கல எல்லாம் காட்ட அவரு வாய வெச்சிட்டு சும்மா இல்லாம நல்லா இருக்குன்னு சொல்லிட்டாரு.. உடனே நம்ம மண்டைல 1000 வாட்ஸ் பல்ப் ஒன்னு பளிச்சுனு எரிஞ்சுது.. இதையே போஸ்டா போட்டா என்னன்னு.. சோ மக்கள்ஸ் நீங்க இந்த கொடுமைய அனுபவிக்க காரணமானவர கை காமிச்சிட்டேன்.. இனி நீங்களாச்சு.. அவராச்சு.. :-)) சரி... இப்போ நம்ம கிறுக்கல்ஸ என்சாய்(????) பண்ணுங்க :-))

உன்னை காண மனம் துடித்தாலும்
காண்பதை தவிர்க்கிறேன்
என் கண்ணில் வழியும் காதலை
உணர்ந்திடுவாயோ என்ற உறுத்தலினால்

உன்னிடம் பேச மனம் துடித்தாலும்
பேசுவதை தவிர்க்கிறேன்
எங்கே என் மாற்றத்தை
அறிந்திடுவாயோ என்ற அச்சத்தினால்

உன்னை விட்டு விலக நினைக்கிறேன்
இயலவில்லை...
உன்னை மறக்க முயற்சிக்கிறேன்
முடியவில்லை...
உன்னுடன் வாழ ஆசைபடுகிறேன்
அதிர்ஷ்டமில்லை...
சரியென்று சாக துடிக்கிறேன்
துணிவுமில்லை!!!

*********************

உன்னிடம் என் துயரங்களை கூறி
மடியில் முகம் புதைத்து அழுகையில்
உணர்கிறேன்
எல்லாம் நன்மைக்கே!!!


********************

என்னவனின் நினைவுகளை கூட
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாதாம்..
அவை தனக்கு மட்டுமே சொந்தம்
என்று என் மனம்
உரிமை கொண்டாடுகிறது!!!

Deleted scenes of Learn Blogging in 30 days!!!

Makkals, ellarum eppadi irukkeenga? Namma KK potta Learn Blogging in 30 days post padichiruppeenga.. Aana adhula neraya scenes-a KK delete pannitaaru.. Exclusive-a ungalukkaaga inga adha release pandrom.. start meejic :-))

When Priya neram priya was telling about what inspired her to write the story, karthikeyan noticed that KK was busy writing something on his notepad. He was really surprised to see such a studious student taking notes in the class and wanted to praise KK. But when he went near KK's seat, KK was seriously drawing something on his notepad. Karthikeyan got furious on seeing this and made KK to stand up on the bench. Seeing KK standing on the bench with his heads down, he said "Now you feel ashamed for standing on the bench. You will remember this punishment hereafter and be attentive in the class". KK with one appavi look immediately replied "If I keep my heads up it is hitting on the roof sir :-( "

Whole class burst out laughing...

The cultural function was announced and everyone was participating on some program or the other. KK enrolled his name for singing competition and immediately ran to Prithz asking her to teach him some nuances of singing. The song he had chosen to sing was Minnalae from May maadham. How much ever Prithz trained him he was unable to get the sad mood on his voice. Prithz was so upset and asked s0ul to help her out. s0ul thought that this would be the best chance to take revenge on KK, for not getting the vendakka sambar he had promised her. She murmured something on Prithz's ears and immediately they both went to Karthikeyan and spoke to him. The next day Karthikeyan announced that each team participating will have a colour to represent their team. The colours will be allocated by the management team and the participants will be receiving their respective costumes. Just when the singing competition was about to start, Prithz gave KK a parcel saying that was the costume allocated for him. When KK came out of dressing room with his pink colour costume he was completely sad as he hated that colour. Finally on the stage he sang the song with utmost sadness and won the first prize. Prithz and s0ul were too happy to see KK in pink dress and were jumping all around the stadium :-)

To be continued...