பையா



ஜி3யின் வாழ்க்கையில் முதல் முறையாக படம் வெளிவந்த அன்றே படத்தை பார்த்து முதல் ரெக்கார்ட் ஆரம்பிச்சாச்சு நேத்து. ப்ளானிங் ஆரம்பிச்சதென்னமோ "Clash of the Titans" படம் பாக்க தான். ஆனால கடைசில நண்பன அவன் குடும்பத்தோட அந்த படம் போறதால ப்ளான மாத்தி பையா போகலாம்னு முடிவு செஞ்சோம். ஆனா எங்களோட நிதி நிலைமை ஒத்துழைக்காததால (வெறும் 3 ரூபாய அக்கவுண்ட்ல வைச்சிக்கிட்டு எங்க டிக்கட்ட புக் பண்றது) வியாழக்கிழமை சமபளம் வரும் வரை காத்திருக்க வேண்டியதா போச்சு. சம்பளம் வந்தப்புறம் பாத்தா ஊருக்குள்ள இருக்கற அத்தனை தியேட்டரும் ஹவுஸ்புல் :(( சரி வேற வழியில்லை. போடு மாயாஜால்ல டிக்கட்டனு மாலை 4.30 மணி காட்சிக்கு புக் பண்ணியிருந்தோம்.

நண்பனின் அறிவுரைப்படி மத்த மக்கள்ஸ்க்கு படம் டைம் 4.15னு சொல்லி வைச்சதால எல்லாரும் கரெக்டா 4.20க்கு வந்து சேந்துட்டாங்க. ஆனா தியேட்டர்காரனோ 4.30 மணி ஷோவுக்கு 4.40க்கு தான் உள்ளையே விட்டான் :(( [நாங்க லேட்டா போனா மட்டும் கரெக்டா ஆரம்பிச்சிடறான்பா :(( ] படத்த பத்தி சொல்லனும்னா “All(லாஜிக்கே இல்லாத கதையும் சேத்து தான்) is fair in love and war" ங்கற பழமொழிய ஒத்துக்கறவங்கவளுக்கு வேணா படம் புடிக்கலாம்.. மத்த மக்கள்ஸ்.. ஒரு தபா பாக்கலாம். சில சீன்கள் (நண்பர்கள் கார்த்திய கலாய்க்கறது) சிரிக்க வைப்பது உறுதி. ஒரு காட்சியில் கார்த்தி ஃபோன்ல ஓவரா ஃபீல் பண்ணி அவரோட காதல் ஃபீலிங்க்ஸ சொல்லிட்டிருக்கறப்போ ”முன்னாடி எல்லாம் காரை எவனாவது லைட்டா தொட்டாலே எவ்ளோ கோவம் வரும். இப்போ எல்லாம் எவனும் கீறிட்டு போனா கூட கோவமே வரமாட்டேங்குது”னு சொல்ல உடனே காருக்கு சொந்தக்கார நண்பன் “எப்படிடா வரும் அது என்னோட காராச்சே”னு சொல்லவும் கார்த்தி உடனே ஃபோன கட் பண்ணிடறார் :)))

கார்த்தி - முந்தின ரெண்டு படத்துல பண்ண மாதிரியே கேர்லெஸ் காரெக்டர். தமன்னாவ பாத்து ஓவரா வழியறாரு. ஆனா இம்புட்டு வழியறவரு கடைசி வரைக்கும் காதல தமன்னா கிட்ட சொல்ல மாட்டாராம். கடைசி சீன்ல நண்பர்கள் வந்து தமன்னா கிட்ட போட்டு குடுப்பாங்களாம் அவரு அம்மணிய எம்புட்டு லவ் பண்றாருன்னு.. அப்பவும் சார் வெட்கப்பட்டுக்கிட்டு அப்படியெல்லாம் இல்லைங்கனு டயலாக் விடுவாராம்.. அவ்வ்வ்வ்வ்வ்... என்ன கொடுமை சரவணா இது :((

தமன்னா - கார்த்தியோட லவ்வ எவ்ளோ ஓபனா காமிச்சிருக்காங்களோ அதுக்கு ஆப்போஸிட்டா அம்மனிக்கு வர்ற லவ்வ ரொம்பவே subtle-அ சொல்லியிருக்காங்க. ஆர்ப்பாட்டம் அதிகம் இல்லாம அதே சமயம் ஓவர் அழுவாச்சியாவும் இல்லாத காரெக்டர் :)

கார்த்தியோட நண்பர்கள் - எல்லாருமே புது முகம். வழக்கமான நண்பர்கள் வட்டம் இல்லாம வெளில வந்த்த்துக்கே லிங்குசாமிக்கு நன்னி சொல்லனும். ஆனா அதுல எந்த பசங்களுமே கண்ணுக்கு குளுர்ச்சியா இல்லைங்கறது வருத்தமான விஷயம் :(

தமன்னாவ துரத்தற கும்பல் + கார்த்திய துரத்தற கும்பல்.. படத்துல பெஸ்ட் காமெடி பீஸ் :))) ரெண்டு காரெகடர்.. ஒரு அம்மா காரெக்டர் (யாரோட அம்மானு கடைசி வரை சொல்லவேயில்லை :P)+ கார்த்தியோட அப்பா காரெக்டர்... போன்ல மட்டுமே சவுண்ட் உட்டு அப்பீட் ஆகிடறாங்க :)

பாடல்கள் - என் காதல் சொல்ல நேரமில்லை பாட்டு மட்டும் ஃபிரெண்டோட ரெக்கமெண்டேஷ்ன்னு கேட்டேன். பிடிச்சிருந்துது. ஆனா படத்துல பாக்கறப்போ தேவையே இல்லாத ஒரு இடத்துல அந்த பாட்ட போட்டிருந்தது கொடுமை. படம் ஆரம்பத்துல வர்ற துளிதுளி, பூங்காற்றே பாட்டு சுமார் ரகம். நண்பன் ”இதுக்கு அவன் பேசாம தமன்னா போட்டோவ ஸ்லைட் ஷோவா போட்டிருக்கலாம்.. நல்லா இருந்திருக்கும்”னு ஃபீல் பண்ணான். மூனாவதா வந்த அடடா மழை பாட்டு கொடுமெயிலும் கொடுமை. இதுக்கு பேசாம நம்ம கவிப்பேரரசு குசும்பர் பஸ்ல போட்ட எதிர்கவிஜய கடன் வாங்கியாவது பாட்டா போட்டிருக்கலாம்னு தோனுச்சு :). சுத்துதே சுத்துதே பாட்டுக்கு அவங்க கற்பனை பண்ணியிருந்த லொகேஷன் கான்செப்ட் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா அது ஸ்க்ரீன்ல பாக்கதான் கொஞ்சம் கொடுமையா இருந்துச்சு :(

மொத்தத்துல படம் ஓகே டைப். தாராளமா ஒரு தபா பாக்கலாம். முழு படமா பாக்கறத விட டீவில ஒன்னு ரெண்டு சீனா போடறப்போ பாத்தீங்கனா ரொம்பவும் பிடிக்கும் :))

கிளிஞ்சல்கள் - மார்ச் ‘10

மு.கு. : போன வாரம் சனிக்கிழமை எழுதி வைச்ச பதிவு இது. ப்ளாகர் சதியால பப்ளிஷ் பண்ண முடியாம போயிடுச்சு. இப்போ சில தில்லாலங்கடி வேலை பண்ணி போஸ்டை மீட்டெடுத்து பப்ளிஷிங்.. சில திருத்தங்களுடன் :))))))


வேலை இல்லாம வீட்ல வெட்டியா இருக்கறது ஒரு சுகம். அதிக வேலை இருந்து ஓவரா உழைச்சாலும் அந்த வேலை முடிச்சதும் ஒரு திருப்தி வரும் பாருங்க. அது வேறு விதமான சுகம். ஆனா இது ரெண்டும் இல்லாம தினமும் ஆபீஸ் போயிட்டு வெட்டியா உட்கார்ந்துட்டு வர்ற கொடுமை இருக்கே.. அவ்வ்வ்வ்வ்வ்... முடியலைங்க.. எவ்வளவு நேரம் தான் நானும் ஏதாவது டாக்குமெண்ட்ட தொறந்து வைச்சிக்கிட்டு படிக்கற மாதிரியே சீன போடுறது?? :((( தினமும் காலைல 10 / 11 மணிக்கு ஆபீஸ் போக வேண்டியது. கொஞ்ச நேரத்துல ஜூஸ் ஃப்ரேக்.. ஆமாங்க நான் வெளில காபி எல்லாம் சாப்பிட மாட்டேன்.. ஒன்லி ஃப்ரெஷ் ஜூஸ் தான் :P எப்படியும் திரும்பி சீட்டுக்கு வர 12 - 12.30 ஆகிடும். அடுத்து லஞ்ச் சாப்பிட 1.30 மணிக்கு போனா 2.30 மணிக்கு திரும்பி வந்துடுவோம். மறுபடி 3.45க்கு ஃப்ரேக் டைம்.. சாயங்கால நேரம்ங்கறதால அப்படி ஆபீஸ விட்டு வெளில வந்து ஒரு வாக்கிங் போனா பக்கத்துல இருக்கற டாமினோஸ்லயோ, சங்கீதாலயோ, பாஸ்கின்ஸ் ராபின்ஸ்லயோ, கேக் ஷாப்லயோ, சாட் செண்டர்லயோ, இல்லாட்டி ரோட்டோரம் விக்கற இளநீரோ, கரும்பு ஜூஸோ, தள்ளுவண்டில கொண்டு வர்ற குவாலிட்டி வால்ஸ் ஐஸ்க்ரீமோ சாப்டுட்டு திரும்ப 5 மணிக்கு சீட்டுக்கு வந்துடுவோம். 6 மணி ஆனதும் டான்னு வூட்டுக்கு கிளம்பி வந்துடுவோம். இதுக்கு நடுவுல ரொம்ப போர் அடிச்சா அப்படி பாண்டி பஜார் பக்கம் போய் இருக்கற காசுக்கு எதாவது ஷாப்பிங் பண்ணிட்டு வருவோம். இதெல்லாம் ஒரு பொழைப்பானு நீங்க கேக்கறது புரியுது. அதான் மனசாட்சி உறுத்தலுக்காக வாரத்துல ஒரு நாள் லீவு போட்டுட்டு வீட்ல ரெஸ்டிங் :)) ஏதோ வேலை இல்லாட்டியும் இப்படியாவது பொழுதை ஓட்டலாம்னு பாத்தா அதுக்கும் ஆப்பு வைக்கறாங்க. கூடிய சீக்கிரமே எல்லாரையும் மஹிந்திரா சிட்டிக்கு மாத்தறோம்னு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அந்த காட்ல போய் எப்படி பொழைப்ப ஓட்றது.. நினைச்சாலே டெர்ரராஆஆஆ இருக்கே :(((((


வருஷத்தோட முதல் நாள் எப்படி இருக்கோமோ அப்படித்தான் வருஷம் முழுக்க இருக்கும்னு யாரோ சொன்னாய்ங்க. ஆனா என் விஷயத்துல மட்டும் அது உல்டாவேவே இருக்கு. வருஷத்தோட முதல் நாள் வெட்டியா வூட்ல ஒக்காந்து ஆத்தாவ குலாப் ஜாமூன் செய்ய சொல்லி அருண் ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வந்து குலாப்ஜாமூன் வித் ஐஸ்க்ரீம் சாப்ட்டு வீட்ல நல்லா ரெஸ்ட் எடுத்தேன். ஆனா அதுக்கப்புறம் ஊர் சுத்தல்ஸோ சுத்தல்ஸ் தான். ஒரு வாரம் கூட வீக் எண்ட் வீட்ல வெட்டியா உட்கார்றதில்லை :(( அதுலயும் டாப் 4 வாரமா தொடர்ந்து எதாவது ஒரு படம் போனது தான். நான் எப்போ இவ்ளோ சினிமா பைத்தியம் ஆனேன்னு எனக்கே புரியலை. ஆனா ஆன்லைன் புக்கிங் புன்னியத்துல சத்யம் தியேட்டர் மட்டும் போயிட்டிருந்த நாங்க இப்போ தேவி, காசி, ஈகா, அபிராமினு எல்லா தியேட்டரும் சுத்த ஆரம்பிச்சிட்டோம். சரி போன வாரமாவது வீட்ல இருக்கலாம்னு பாத்தா ம்ஹூம்.. ஃப்ரெண்டுக்கு திங்கட்கிழமை கல்யாணம். ஞாயிறு சாயந்திரம் ரிசெப்ஷன். அதுக்கு கிப்ட் வாங்கறோம்னு போன சனிக்கிழமை ரவுண்ட்ஸ். பல்லாவரத்துல இருந்து கிளம்பி ஒலிம்பியா டெக் பார்க் கிட்ட நண்பன மீட் பண்ணிட்டு, அங்க இருந்து அண்ணா நகர்ல இருக்கற இன்னொரு நண்பன் வூட்டுக்கு போயிட்டு, 3 பேரும் கிளம்பி ஷாப்பிங் போய் கிப்ட் எல்லாம் வாங்கிட்டு மந்தைவெளில இருக்கற பொண்ணு வீட்ல வந்து எல்லாத்தையும் குடுத்துட்டு, அப்படியே மாப்பிள்ளையும் பொண்ணும் கல்யாணத்துக்கப்புறம் தங்கப்போற வீட்டுக்கு மாப்பிள்ளையோட போய் பாத்துட்டு வந்து மறுபடி பொண்ணு வீட்ல வந்து கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சிட்டு ஒரு 7.30 மணிக்கா கிளம்பி அடையார் வேங்ஸ் கிட்சன்ல டின்னர் சாப்டுட்டு சமத்தா வூட்டுக்கு வந்து சேந்தாச்சு (ஒரு நக்ர்வலம் போயிட்டு வந்த எஃபெக்டல இருந்துச்சு !!!). ஆனா ஞாயிறும் திங்களும் போன வேகம் தெரியலை. சரி கலாட்டாவா இருந்துது. நான் பொண்ணு வீட்டு சைட்னும் ஃப்ரெண்ட் ஒருத்தன் பையன் வீட்டு சைட்னும் சப்போர்ட் பண்ண, நான் மாப்பிள்ளைய கால வார்றதும் அவன் பொண்ண கலாய்க்கறதும்னு செம ரகளை. மற்றுமொறு மறக்கமுடியாத கல்யாணம் :))))


எப்பவுமே கிரிக்கெட் மேட்ச் பாக்கற ஆர்வம் எனக்கு இருந்ததில்லை. வீட்ல வேற யாராவது மேட்ச் பாக்கறாங்க வேற சேனல் பாக்கமுடியாதுனா கூட நான் புக் படிக்கவோ இல்ல தூங்கவோ தான் செய்வேனே தவிர நோ கிரிக்கெட். அப்ப்டி இருந்த புள்ள, போன வாரம் மேலே சொன்ன ஈவினிங் ஸ்நாக்ஸ் நேரத்திற்கு டாமினோஸ் போயிருந்தப்ப, அங்க இருந்த டீவில சென்னை சூப்பர் கிங்ஸ் Vs டெல்லி டேர் டெவில்ஸ் மேட்ச் ஓடிட்டிருந்துது. கூட வந்த ஃப்ரெண்டு ஆர்வமா அதை பாக்க, பேச்சு துணைக்கு ஆள் இல்லாம நான் வெளில வேடிக்கை பாத்துட்டிருந்தேன். டெல்லி டீம் பயங்கரமா ரன் அடிச்சிட்டிருந்ததால சென்னை ஜெயிக்கறது கஷ்டம்னு ஃபீலிங்க்ஸ் வேற இதுல. திரும்பி வீட்டுக்கு வந்ததும் என்னையும் அறியாம ஒரு ஆர்வம் மேட்ச் என்ன தான் ஆச்சுனு. பாத்தா 26 பால்ல 31 ரன் வேனும்னு இருந்துது. கொஞ்ச நேரம் பாத்தேன்... முடியலை. நமக்கு இதெல்லாம் பாக்கற அளவுக்கு என்னைக்கு பொறுமை இருந்திருக்கு??? வேற சேனல்ல படம் பாத்துட்டே அப்பப்போ இந்த பக்கம் ஸ்கோர் மட்டும் பாத்துட்டிருந்தேன். ஒரு வழியா கடைசில சென்னை ஜெயிச்சப்போ ஹப்பாடன்னு இருந்துச்சு. ஆனாலும் ஒரு முழு மேட்ச்ச ஃபுல்லா பாக்கற அளவுக்கு என்னைக்காவது எனக்கு பொறுமை வருமானு தெரியலை !!!

வாழ்த்தலாம் வாங்க..



இன்று பிறந்தநாள் கொண்டாடற நாட்டாமை ஷ்யாம், பாடும் குயில் மருதம் மற்றும் நாளை பிறந்தநாள் கொண்டாடப்போற பாசமலர் தம்பி கோப்ஸ், குட்டிப்பொண்ணு ரம்யா எல்லாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி அவங்க சார்பா இந்த கேக்க உங்களுக்கு எல்லாம் குடுக்கறேன்.. நல்லா சாப்டுட்டு மக்கள வாழ்த்திட்டு போங்க :)))