திருட்டுப்பயலே - தையதா




தையதா தையதா தைய தையதா
பையதா பையதா பஞ்சு முத்தம் தா

உயிர் வாழ்கிற வரைக்கும்
உனக்கே மடி கொடுப்பேன்
இனி ஓர் ஜென்மம் இருந்தால்
உனக்கே மீண்டும் பிறப்பேன்
உனது கனவில் நினைவில் உருவில்
நானே என்றும் இருப்பேன்

தையதா தையதா தைய தையதா
பையதா பையதா பஞ்சு முத்தம் தா

நிலங்கள் உடைந்து போனாலும் நிழல்கள் உடைவதில்லை
நேசம் பாசம் நிஜமானது
மழையில் கிளிகள் நனைந்தாலும் சாயம் போவதில்லை
அன்பே நம் காதல் அது போன்றது
பெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை
சொன்னதை செய்தாலே நிகரேதும் இல்லை
நீ உறுதியானவன் என் உரிமையானவன்
பசி ருசியை பகல் இரவை பகிர்ந்து கொள்ளும் தலைவன்

தையதா....
தையதா தையதா தைய தையதா
பையதா பையதா பஞ்சு முத்தம் தா

குங்குமம் அப்பி குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண்நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனம் ஆட்ட கனா கண்டேன் தோழி நான்

பிறவி வந்து போனாலும் உறவு முறிவதில்லை
உயிரை உயிரால் முறுக்கேற்றவா
உன்னை போன்ற அன்பாளன் யார்க்கு வாய்க்கும் மீண்டும்
உடலை உடலால் குளிப்பாட்டவா
ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா
மறு கணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும்
உன்னை இறுக்கி அணைக்கிறேன் உயிர் நுரைக்க ரசிக்கிறேன்
அணுஅணுவாய் உனை பிளந்து என் ஆயுள் அடைப்பேன்

தையதா....
1 Response
  1. gils Says:

    ?? ennatha thekanumnu thaiya thaa thaiya thaangareenga??